புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த இரண்டாவது நாளே மரணித்த தம்பதியினர்..! – நடந்தது இது தான் ..!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்தரன் மற்றும் உஷா தம்பதியினர் இரண்டு தினங்களுக்கு முன்பு அவர்கள் புதிதாக கட்டிய வீட்டில்  தனது மகள் ரிந்தியாவுடன் கிரகபிரவேஷம் செய்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று பயங்கர அலறல் சத்தத்துடன் மகள் ரிந்தியா உடலில் தீயுடன் ஓடி வந்துள்ளார். இவரது கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து, தீயில் சிக்கிய ரவீந்திரன் மற்றும் உஷா ஆகியோரை காப்பாற்ற தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம், மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையின் போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மகள் ரிந்தியா பலமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …