பிரதமர் மோடி-அமித் ஷாவை சந்தித்த கெவின் பீட்டர்சன்..எதற்காகக் சந்தித்தார்..!!

பிரதமர் மோடி-அமித் ஷாவை சந்தித்த கெவின் பீட்டர்சன்:இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்த நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பீட்டர்சன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீட்டர்சன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்:

கெவின் பீட்டர்சன், பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கெவின் அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார், ‘சர் நரேந்திர மோடி, உங்கள் பிறந்தநாளில் சிறுத்தைகளை விடுவிப்பது பற்றி செய்திகளில் நான் அறிந்தேன் அந்த நிகழ்வு என்னை வெகுவாக கவர்ந்தது..மேலும் மக்களுக்கு மென்மேலும் பல தொண்டுகள் செய்து சாதனை புரிய எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று உங்கள் புன்னகைக்கும் உறுதியான கைகுலுக்கும் நன்றி. உங்களை மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்!’ என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு, ‘இன்று காலை மிக அற்புதமான வரவேற்புக்கு நன்றி, அமித் ஷா ஜி, உங்களின் கருத்துக்கள் நிறைந்த உரையாடலுக்கு நன்றி. நீங்கள் அன்பான, அக்கறையுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் நபர்..!! உங்களின் இந்த உபசரிப்பக்கு மிகுந்த நன்றி என்று பீட்டர்சன் டிவிட் செய்துள்ளார்.இவர் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

இந்தியாவில் வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த மூன்று நாள் ரைசினா உரையாடல் நிகழ்ச்சியில், முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டார், இதில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார். அவர் இந்தியாவுக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …