விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கிற்கு ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் தமிழகத்தில் உள்ள 800 திரையரங்குகள் இந்த திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் யஷ் நடிப்பில் உருவான கன்னட திரைப்படமான கேஜிஎப் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளான, ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவிய போதும், 250 திரையரங்குகள் வரை மட்டுமே ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது.
ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில், முதல் நாளிலேயே கேஜிஎப் திரைப்படத்திற்கு கூடுதலாக 80 திரைகள் கிடைத்தன. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேலும் 23 திரையரங்குகள் காட்சிகளை உயர்த்தி மொத்தமாக 353 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இருப்பதால் நாளை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் KGF-க்கு கூடுதலாக 50 திரைகள் வரை உயர்ந்து 400 திரைகளில் திரையிட வாய்ப்புள்ளது என்றும் விவரம் அறிந்த வட்டராங்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமே KGF 100 கோடியை அள்ளி செல்லும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள் பலன் கூறுகிறார்கள்.