கொன்றால் பாவம்… நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பூஜையோடு ஆரம்பம்…!

 நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாகிய வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயார் பத்மநாபன் இயக்கத்தில்  சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கொன்றால் பாவம் என்ற படத்தின் பூஜை  சென்னையில் நடைபெற்றது.

ஏற்கனவே நடிகை வரலட்சுமி பல முக்கியமான தமிழ் படங்கள் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தார்.

 மேலும் தனது அப்பாவை போலவே நடிப்பில் அசத்தி வருவதாக இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள் அந்த அளவுக்கு வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து அதை நடிப்பதில் இவர் வல்லவர்.

அந்தவரிசையில் தற்போது இவர் கொன்றால்பாவம் எனும் படத்தில் நடிக்க உள்ளார். எந்த படத்தின் கதை அம்சம் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தப் படத்தில் இவர் வித்தியாசமான கெட்டப்பில் காட்சி அளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என்று பலவிதமான செய்திகள் பரவி வருகிறது.

 1981 களில் நடந்த க்ரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாவலை அடிப்படையாகக் கொண்டது.

 இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம், சிவா இம்ரான், சென்ராயன், ஸ்ரீனிவாசன் யாசர், கவிதா பாரதி, தங்கத்துரை கல்யாணி, மாதவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

 மேலும் பிரதாப் கிருஷ்ணா மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யா சி எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் முதல் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதை அம்சம் எப்படி இருக்கும் இதில் இவரது ரோல் என்ன என்று தற்போது ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

 பட பூஜை முடிந்தது விட்டால் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டால் மிக விரைவில் படம் திரை வந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …