தெலுங்கில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தொடர்ந்து ஷியாம்சிங்ராய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படம் நேரடி தெலுங்கு திரைப்படம் ஆகும். ஆனால், ஒரே நேரத்தில் தமிழிலும் உருவானது. எனவே முதல் தமிழ் திரைப்படம் இவருக்கு தி வாரியர் என்று கூறலாம்.
ஆனால் தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த திரைபடத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இந்த திரைப்படம் வெளியான பிறகு தமிழில் தனக்கான மார்க்கெட் ஓபன் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகருடன் கலந்துரையாடிய கீர்த்தி ஷெட்டியிடம் விஜய் மற்றும் சூர்யா குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
நடிகர் விஜய் ஊக்கமளிக்க கூடிய சூப்பர் ஸ்டார் என்றும் நடிகர் மகேஷ்பாபு சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் என்றும் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.
இப்படி சமத்துப் பிள்ளையாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
இந்நிலையில், சமீபத்தில் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலரு தான் பிராய்லர் கோழி.. ஆனால்.. தரமான நாட்டுக்கோழி என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.