பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டு இருக்க கூடிய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூப்பர் 30 என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
கடந்த 20021-ஆம் ஆண்டு வெளியான் உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை சம்பாதித்தார் அம்மணி. கீர்த்தி ஷெட்டி நடிப்பில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான தெலுங்கு படமான தி வாரியர் என்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற புல்லட்டு என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதன் மூலம் தனக்கான தமிழ் ரசிகர்களையும் வெகுவாக சம்பாதித்துக் கொண்டார் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது மலையாள திரைப்படம் மற்றும் சூர்யா ஒரு திரைப்படம் என நடித்து வரும் இவர் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்.
காரணம் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி. ஆனால் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு இந்த படத்தை ட்ராப் செய்யும் அளவுக்கு கொண்டு போய் விட்டது.
இதனால் இவருடைய முதல் நேரடி தமிழ் திரைப்படமான வணங்கான் திரைப்படம் டிராப் ஆகிவிட்டது. எனவே, மிகுந்த சோகத்தில் இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி என்ற விவரம் இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் தொடர்ந்து நல்ல தமிழ் படத்தில் நிச்சயம் அறிமுகம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணையப் பக்கத்தில் 4 மில்லியன் ரசிகர்களுக்கும் அதிகமாக பெற்றிருக்கும் கீர்த்தி ஷெட்டி 19 வயதே ஆனாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இவர்கள் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.