ஏன்? எதற்காக… ரஜினியை சந்தித்தார் குஷ்பூ … சூடுபிடிக்கும் ரசிகர்கள் கேள்வி?

 1990 களில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளின் வரிசையில் இளைஞர்களின் நெஞ்சில் குடி புகுந்த நடிகை தான் குஷ்பூ இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட சுந்தர் சி யோடு இணைந்து வாழும் இவர் தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ள நிலையிலும் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார்.

 மேலும் இவர் அதிகளவு அரசியலில் ஈடுபாடுடன் வலம் வருவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் இவர் ரஜினியை திடீர் என்று சந்தித்தது தொடர்பாக ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.இந்த சந்திப்பு எது நிமித்தமானது என்று அவர்கள் கேட்டிருப்பதை  தொடர்ந்து அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

 இப்போது நடிகை குஷ்பூ தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இவர்  சூப்பர் ஸ்டாரை சந்தித்திருப்பது ஒரு சாதாரண சந்திப்பு தான் என்று கூறி இருக்கிறார்.

மேலும் அது தொடர்பான விஷயங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கக்கூடிய குஷ்பூ அவருடன் தேநீர் அருந்தியது மிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் இந்த பொன்னான நேரத்துக்கு மிகவும் நன்றி சார் என அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பதிலைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். ரஜினியுடன் இவர் தர்மத்தின் தலைவன், மாமன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் குஷ்பூ இணைந்து நடித்திருக்கிறார்.

 மேலும் இவர் தற்போது ரஜினி நடிப்பில் தற்போது வெளிவந்த அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அரசியலில் ஈடுபட்டிருக்கும் குஷ்பூ ரஜினியை சந்தித்து இருப்பது அரசியல் நிமித்தமான கண்டிப்பாக இருக்குமோ என்று ரசிகர்கள் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் தற்போது அது சாதாரண சந்திப்பு தான் என்பதை அறிந்து கொண்டு நிம்மதி பெரும் மூச்சு விட்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …