“படத்துல நடிக்கணுமா நடி… ஆனா, இதை எங்களிடம் எதிர்பார்க்க கூடாது..” – மகளுக்கு குஷ்பூ போட்ட கண்டிஷன்..!

சின்னத்தம்பி படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய குஷ்பூ 90 காலகட்டங்களில் தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்த போதிலும் தமிழில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்ததற்கு காரணம் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததுதான்.

இவர் சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பன்முகத் திறமையை கொண்டவர். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.குஷ்பு இயக்குனரான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். இதில் ஒரு மகள் லண்டனில் படித்து வருகிறார்.

லண்டனில் படிக்கும் அவந்திகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல. மேலும் இவர் லண்டனில் நடிப்பு பயிற்சியைத் தான் தேர்வு செய்து படித்திருக்கிறார். எனவே இவர் விரைவில் சினிமாவில் கதாநாயகியாக தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்த விஷயத்தை புரிந்து கொண்ட அம்மாவான குஷ்பூ இவர் நடிப்பதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். ஆனால், எங்கள் இருவரிடம் இருந்தும் எந்தவிதமான சிபாரிசோ அல்லது பண உதவியோ எதிர்பார்க்க கூடாது.. உன்னுடைய திறமையை வைத்து சினிமாவில் நுழைந்து ஜெயிக்க முடியும் என நம்பினால் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறிவிட்டாராம்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் தற்போது உள்ள சூழ்நிலையில் வாரிசு நடிகைகளை அறிமுகப்படுத்துவதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல கோடிகளை செலவு செய்ய முன்வந்துள்ள நிலையில் இவர் இவ்வாறு பேசியிருப்பது திரையுலகில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே குஷ்புவின் மகளான அவந்திகா தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டி பெரிய திரையில் எப்போது ஜொலிப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இறைவன் அருளோடு அதிர்ஷ்டமும் கை கொடுத்தால் நிச்சயமாக திரையுலகில் அவந்திகாவும் சாதிப்பார் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …