தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் எந்த படத்தில் நடிக்கும்போது வெறும் 15 வயது தான் முதல்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதுவும் தீபாவளி நாளில் வெளியானது திரை படத்திற்குப் போட்டியாக வேறு முன்னணி நடிகர்கள் படம் எதுவும் வெளியாகாதது, இந்த படத்திற்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆக மாறியது.
கும்கி படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் தமிழ்நாட்டு மாநில விருது ஆகியவை இவருக்குக் கிடைத்தது. இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தன. சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார்.
எவ்வளவு காசு கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் லட்சுமி மேனன் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் நான் படிப்பைத் தொடரப் போகிறேன் என்று என்னுடைய சொந்த மாநிலத்திற்கு மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் நடித்த திரைப்படம் கும்கி மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது என்றாலும் அந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு பிடிக்காத விஷயம் ஒன்று இருந்தது.
அது என்னவென்றால் அந்த படத்தில் நடிக்கும்போது நான் பள்ளிக்கு விடுமுறை எடுத்தது கிடையாது. பள்ளி முடிந்த பிறகு அவசரஅவசரமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தன்னுடைய காட்சிகளை நடித்துக் கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.
பள்ளி முடிந்ததும் நான் மிகவும் சோர்வாக இருப்பேன் அந்த சோர்வோடு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ப்ரெஷ்ஷாகி விட்டு மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலும் பெரிய காட்சிகள், பாடல் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளை எல்லாம் பள்ளியின் விடுமுறை நாட்களில் தான் படமாக்கினார்கள்.
இந்த படத்திற்காக ஒரு நாள் கூட நான் பள்ளிக்கு விடுமுறை போட்டது கிடையாது. எனவே மாலை நேரத்தில் சோர்வுடன் இருக்கும் என்னை படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று நடிக்க வேண்டி இருந்தது எனக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது எனக் கூறினார் லட்சுமி மேனன்.