“ஓவர் சபலம்.. இளம் நடிகைகளுடன் உல்லாசம்..” – மதுவால் சீரழிந்து போன இளம் நடிகர்..!

இந்திரன் கெட்டது பெண்ணாலே.. சந்திரன் என இருவரும் கெட்டது பெண்ணாலே என்று கூறுவார்கள். கடைசியாக எந்திரன் (சிட்டி) கெட்டதும் பெண்ணாலே தான் என்பதை பார்த்தோம்.

மது மாது இந்த இரண்டு பழக்கமும் ஒரு மனிதனிடம் வரும்பொழுது அவனுடைய வாழ்க்கை தடம் மாறும் உல்லாசமாக வாழ்வது போன்ற தோற்றத்தை கொடுக்கும் அடுத்தடுத்த நாட்களில் அந்த மனிதனை அடியோடு அழித்துவிடும்.

மது மாது இந்த இரண்டு பழக்கமும் அளவோடு இருக்கும் போது பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இந்த இரண்டுக்கும் ஒரு மனிதன் அடிமை ஆகிறான் என்றால்.. அவன் வாழ்க்கையின் கோர முகத்தை பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறான் என்பதை உறுதியாக சொல்லலாம்.

அந்த வகையில் பிரபல இளம் நடிகர் ஒருவர்.. சினிமாவில் முன்னணி நடிகராகும் வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கப்பட்ட ஒருவர்.. மது மாது என இரண்டு பழங்களுக்கும் அடிமையாகி தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் சொற்ப வருமானம் வரக்கூடிய தன்னுடைய தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றால் பலரும் அதிர்ச்சி ஆகித்தான் போவார்கள்.

தன்னுடைய பெயரிலேயே உயிரை வைத்திருக்கும் அந்த நடிகர் வில்லனாக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு ஹீரோ வாய்ப்புகள் எல்லாம் வந்தது.

ஹீரோவாகவும் சில படங்களில் வெற்றி நடை போட்டார். ஆரம்பத்தில் இந்த மூஞ்சியெல்லாம் மார்க்கெட்டுக்கு ஆகாது. ஹீரோவாக நடித்தால் எங்கே விளங்கும் என்று எல்லி நகையாடியவர்கள் கூட இவருடைய அசுர வளர்ச்சியை கண்டு வியந்து போனார்கள்.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் தன்னுடன் நடித்த சக நடிகைகளுடன் இரவு நேர பார்ட்டி என்ற ஆரம்பித்த இவருடைய பழக்கம்.. நாட்கள் செல்ல செல்ல பகலிலும் குடி கூத்து கும்மாளம் என மாறியது.

மேலும் ஹீரோ வாய்ப்பு கொடுக்க வரும் இயக்குனர்களிடம் என் படத்தில் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து ஹீரோயின்கள் இருந்தால் தான் நடிப்பேன் என்று கூறுவதுடன் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நடிகைகளை படத்தில் ஹீரோயின் ஆக்க வேண்டும் என்று அலம்பல் செய்வதுமாக இருந்து வந்துள்ளார்.

மட்டுமில்லாமல் பல இளம் நடிகைகளிடம் என் படத்தில் உன்னை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று கூறி பகல் இரவு பாராமல் தனது பங்களாவில் வைத்து அனுபவித்து சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகைகளும் முன்னணி நடிகர் என்பதால் அவருடைய ஆசையை நிறைவேற்றி வந்துள்ளனர்.

அந்த உயிரான நடிகர் இரவு பகல் பாராமல் குடி கூத்து கும்மாளம் என இருந்த இவருக்கு வாழ்க்கை தன்னுடைய கோர முகத்தை காட்ட தொடங்கியது. தேடி வந்து பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் தற்பொழுது தேடிச் சென்றாலும் கண்டுகொள்ள தயாராக இல்லை.

சிறு சிறு கதாபாத்திரங்களாவது கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை ஏறி இறங்கிய நடிகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு காலத்தில் ஒரே நாளில் லட்சங்களை செலவு செய்து உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் தற்போது ஒரு மாதத்திற்கு சில லட்சங்கள் மட்டும் வருமானம் வரக்கூடிய தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ஊரை சுற்றி வருகிறார். இவருடைய மதுப்பழக்கமும்.. பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி இளம் நடிகைகளை சீரழித்த பாவமும்தான் இவரை துரத்துகிறது என்று கூறுகிறார்கள்.

மட்டுமில்லாமல் ஏகப்பட்ட கடன் பிரச்சினைகளும் நடிகருக்கு இருக்கிறதாம். பிரபலமாகி விட்டோம்.. ஹீரோ ஆகிவிட்டோம்.. என்று தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டு ஆள் அட்ரஸ் தெரியாமல் போன எத்தனையோ ஹீரோக்களை பார்த்திருக்கிறோம்.

அவர்களெல்லாம் பிறந்ததே பணக்கார குடும்பத்தில் தான் என்ற நிலை இருக்கும். ஆனால், இந்த நடிகர் வறுமையில் இருந்து வந்து பிரபல நடிகராகி கோடிகளை சம்பாதித்த பிறகு பணத்தின் அருமையை அப்போதும் உணர்ந்து கொள்ளாமல் ஆட்டம் போட்டு இப்பொழுது அடங்கி இருக்கிறார்.

பொதுவாக சினிமாவில் நடித்த பிறகு வரும் புகழ் நடிகர்களுக்கு இப்படியான வாய்ப்புகளை வழிய வந்து கொடுக்கும். ஆனால் அவற்றில் சிக்காமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவது தன்னுடைய உழைப்பை மெருகேற்றுவது இவைதான் ஒரு நடிகரை நிலைத்து நிற்க செய்யும்.

ஆனால், அறிமுகமாக கூடிய 90 சதவீத நடிகர்கள் இதனை உணர்ந்து கொள்வதே இல்லை என்பது தான் கசப்பான உண்மை நடிகரின் நிலைக்கன்று இவருடைய சினிமா தோழிகள் சிலர் சிலரிடம் உதவி கேட்டு இருக்கிறார்.

இவருடைய தொலைபேசி அழைப்பை கூட எடுப்பதெல்லாம் நடிகைகள் ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள என்ற பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு அப்படியே பொருந்தும்.

Summary in English : The recent scandal of a leading actor losing his chances due to excessive drinking has sparked a debate about the effects of alcohol on one’s career. At the same time, it has also highlighted the importance of Womanism, which is an important concept in modern society.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …