நகைச்சுவை நாயகன் மதுரை முத்துவின் மறுபக்கம்…!! சோ sad…!!

 வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுவார்கள். அந்த வரிசையில் மக்களை சிரிக்க வைப்பதில்  வல்லவராக திகழ்பவர்  மதுரை முத்து.

 இதுவரை சிரிக்க வைக்க கூடிய பக்குவம் நிறைந்த இவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தை எடுத்து பார்க்கும்போது ஒவ்வொன்றும் சோகம் நிறைந்த பக்கங்களாய் உள்ளது.

 இவர் சின்ன திரையில் ஜொலித்த பிரபலம் என்று கூறலாம். இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். அது மட்டுமல்லாமல் இவரை சின்னத்திரை வடிவேலு என்று கூட அழைக்கலாம்.

அந்த அளவு ரசிகர்களின் மனதில் வேரூன்றி இருக்கும் இவரது ஜோக் ஒவ்வொன்றும் அன்றாட வாழ்க்கையில் கூட  பிரதிபலிக்கக் கூடிய தன்மை கொண்டதாக இருக்கும்.

ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கிய இவர் தற்போது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றிக் கொண்டு காமெடிகளை வழங்கி அதை ட்ரெண்டிங் ஆக்குவார்.

 சின்னத்திரையில் மட்டுமல்ல இவர் வெளிநாடுகளுக்கும் சென்று ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதால் படு பிஸியாக இருக்கக்கூடிய நபராக மதுரை முத்து திகழ்கிறார்.

 மதுரையைச் சேர்ந்த இவரின் முதல் மனைவி பெயர் லேகா என்பதாகு.ம் லேகாவுக்கு திருமணமான ஒரே மாதத்தில் அவர் கணவர் அவரை விட்டு ஓடி விட்டாராம். அப்போது வயிற்றில் குழந்தையோடு இருக்கும் லேகா கஷ்டப்படுவதைப் பார்த்து அவரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார்.

 திருமணம் ஆகி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு  சோதனைக் கட்டம் ஆரம்பித்தது என்று கூறும் வகையில் ஒரு சின்ன விபத்தில் முத்து சிக்கிக்கொண்ட போது அதில் இருந்து குணமடைய லேகா மொட்டை அடித்துக் கொண்ட பாசமான மனைவியாவார்.

 இதனை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி தனது பாசமிகு மனைவி உயிரிழந்து விட்டார்.இவரின் மறைவுக்குப் பின் மனமுடைந்த முத்து தன் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக 32 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

 அதுவும் அவர் மனைவியின் தோழியான ரித்து என்ற பல் மருத்துவரை தான் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனைத் பேட்டி ஒன்றில் கண்கலங்க பேசியிருக்கும் மதுரை முத்து இவருக்கு பின்னால் எவ்வளவு சோகங்களா? என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுவதோடு மட்டுமல்லாமல் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …