மகாலட்சுமி வீட்டில்.. எனக்கு இந்த ரெண்டும் தான் தந்தாங்க… ரவீந்தர் ஓபன் டாக்..!

 பல ஆண்டுகளாக காதலித்து பின்பு திடீரென திருமணம் செய்து கொண்ட விஜே மஹாலக்ஷ்மி  மற்றும் ரவீந்தரை பற்றிய அதிக அளவு கூற வேண்டியதில்லை.

திருமணமாகி ஏறக்குறைய ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் சமூக வலைதளங்களில் மிக அழகு பேசப்படக்கூடிய நபர்களாக இவர்கள் இருவரும் திகழ்கிறார்கள்.

மேலும் திருமண வாழ்வின் மூலம் இருவரும் மிக ட்ரெண்டிங் நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு திருமணத்திற்குப் பின்னால் பல யூடியூப் சேனல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளும் பேட்டிகளை கொடுத்து அசத்தி வருகிறார்கள்.

மேலும் நயன்தாரா, விக்கி ஜோடிகள் கூட திருமணத்துக்கு பின்பு இவ்வளவு பிரபலம் ஆனார் என்பது தெரியாது. ஆனால் இவர்களைப் பற்றி தினம் தினம் புதுப்புது செய்திகளை வெளியிட்டு இவர்களை ரசிகர்கள் மிக பெரிய உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் சென்றார்கள்.

இவர்களின் திருமணத்துக்கு பிறகு ரவீந்தர் மகாலட்சுமிக்கு 300 பட்டுப் புடவைகள், தங்க நகைகள் பல கோடிகளில் உருவாக்கப்பட்ட பங்களா என்று அனைத்தையும் பரிசளித்திருக்கிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்கள் அவரிடம் நீங்கள்  மகாலட்சுமி வீட்டிலிருந்து என்ன பெற்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் அசத்தலாக பதில் அளித்து இருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

அந்த பதிலில் அவர் திருமணத்துக்கு பின்பு தான் எந்த ஒரு பரிசையும் மகாலட்சுமிக்கு கொடுத்ததாகவும் காதலித்த போது எந்த ஒரு பரிசையும் அவருக்கு வாங்கி தரவில்லை. அதுபோலவே திருமணமான பின்பு மகாலட்சுமி வீட்டில் இருந்து எனக்கு இரண்டு மோதிரங்கள் மட்டுமே தந்திருக்கிறார்கள். வேறு எதையும் தான் பெறவில்லை என்று மிக நேர்த்தியான முறையில் அழகாகக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து சில ரசிகர்கள் மகாலட்சுமிக்கு இவ்வளவு வரதட்சணை கொடுத்து ரவீந்தர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உண்மையிலேயே இவர் கொடுத்த வைத்த மனிதர் பணம் பாதாளம் வரை பாயும் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …