சர்ச்சையில் சிக்கிய மைனா நந்தினி..! – முதல் கணவர் இப்படித்தான் இறந்தார்..! – சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

மைனா நந்தினி தற்சமயம் சீரியல் நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் அளவிற்கு சின்னத்திரையில் கலக்கி வருகிறார். இவர் தற்சமயம் நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை மைனா நந்தினி முதல் முதலாக தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்தன.

மைனா நந்தினி

மேலும் 2010 ஆம் ஆண்டு வம்சம் எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஏ புள்ள மலர் எனும் வசனம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் கிராமத்து மொழிகளில் பேசி அனைவரையும் வெகுவாக கவர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து மைனா நந்தினி நிறைய தமிழ் படங்களில் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மைனா நந்தினி

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி எனும் மாபெரும் வெற்றி தொடரில் இவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது நடிகை ரக்ஷிதா அவர்களின் தோழியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார்.

இந்த சீரியல் மக்களிடையே மாபெரும் வெற்றி சீரியலாக அமைந்தது இதனை எடுத்து மைனா நந்தினி பிரபல ஜிம் மாஸ்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவருடைய காதலன் தற்கொலை செய்து கொண்டார் இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

மைனா நந்தினி

மேலும் நடிகை மைனா மீது நிறைய குற்றச்சாட்டுகள் மக்கள் முன்பு வைக்கப்பட்டது. இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் மைனா நந்தினி தனக்கான பாதையை மீண்டும் தேர்வு செய்தார். நீண்ட நாட்கள் பல கஷ்டம் துன்பங்களையும் அனுபவித்து பிறகு அதிலிருந்து மீண்டுள்ளார்.

பிறகு 2019 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகருமான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அவருடன் மைனா நந்தினி தற்சமயம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

மைனா நந்தினி

இவரைப் பற்றிய சர்ச்சையான செய்திகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.

செலிபிரிட்டி வாழ்க்கை என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை நிறைய அவதூறுகளையும் பரப்பி மக்கள் அவர்களை கேவலப்படுத்துகிறார்கள் இதில் பயில்வான் ரங்கநாதன் ஒரு முக்கியமான பத்திரிகையாளர் ஆவார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …