கமல் சொல்லி வெளிவந்த உண்மை…! இயக்குனர் மணிரத்தினம் பற்றி ரகசியம்…! வியப்பின் விளிம்பில் ரசிகர்கள்!

தமிழில் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களுள் இயக்குனர் மணிரத்தினமும் ஒருவர். மணிரத்தினம் அவர்களின் தனித்துவமான திரை கதைகளால் பெரிதும் மக்களால் விரும்பப்படுபவர்.

இவர் இயக்குனர் மட்டுமல்ல, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுதுவதில் வல்லவர்.  தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.தற்போது இவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக பிரம்மாண்ட இயக்குனர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.

இவரது திரை பங்களிப்பை பாராட்டி 2002இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.மணிரத்தினம் அவர்களின் படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.

இவரது திரைப்படங்கள் யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். குறிப்பாக காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், சாமானிய மக்களின் நிலைப்பாடு, பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

இவர் உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுப்ப பல்லவியை இயக்கினார். அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்தாலும், இவரது ஐந்தாவது படமான மௌன ராகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய நாயகன், பம்பாய், உயிரே, தளபதி, குரு, இருவர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

மேலும் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் திரைப்படங்களையும் எடுப்பதில் வல்லவர்.ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் பற்றிய ஒரு உண்மையை கூறியுள்ளார்.

அதாவது இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு ஹிந்தி தெரியாது என்பதுதான் அது , இவர் மும்பையில் தான் படித்தார் ஆனாலும் இந்தி தெரியாது. எல்லாம் தெரிந்த இவருக்கு இது மட்டும் தெரியாது என்று வேடிக்கையாக கமல் கூறியுள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …