பொன்னியின் செல்வன் பார்ட் 2… எப்போது திரைக்கு வரும் அறிவித்தாரா? மணிரத்தினம்…!

 சோழர்கள் வரலாற்றை மையமாகக் கொண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் பார்ட் 1 வசூலில் சக்கைபோடு போட்டது. அது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெரும் அளவு பேசக்கூடிய படமாக இருந்தது.

முதல் பார்ட்டில் தன் ஜாலத்தை காட்டி இருந்த மணிரத்தினத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும் அதில் நடித்த நடிகைகளுக்கும்,நடிகர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து PS  இரண்டாம் பகுதி எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

எனவே ரசிகர்களையும் திருப்தி செய்யக்கூடிய வகையில் தற்போது பொன்னியின் செல்வன் பார்ட் 2 பற்றிய அப்டேஷன் வெளியாகிவிட்டது.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் பார்ட்-2 பகுதியானது திரையரங்கிற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இரண்டாம் பகுதிக்கான டப்பிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து முடிந்த நிலையில்  பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றை எடுக்கும்போதே சைடு பை சைடாக இரண்டாம் பகுதிக்கான படப்பிடிப்பையும் மணிரத்தினம் மிக சாமர்த்தியமாக எடுத்துவிட்டார்.

 இதற்குக் காரணம் நிறைய பணத்தை கொட்டி செலவு செய்யப்பட்ட இந்த படத்திற்கு மேலும் அதிக செலவு ஆகக்கூடாது என்பதை மனதில் வைத்துத் தான் இந்தத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு இரண்டு பகுதிகளையும் ஒரே சமயத்தில் எடுத்து பட்ஜெட்டை பாதியாக குறைத்து விட்டார்.

 இதன்மூலம் மணிரத்தினம் வெறும் 250 கோடியில் மிக பிரம்மாண்டமான படத்தை தனது சாமர்த்தியத்தால் திட்டமிட்டு எடுத்திருக்கிறார். இந்த நிலையில் முதல் பகுதி சுமார் 400 கோடியை லாபமாக கொடுத்து இருக்கின்ற வேளையில் இரண்டாம் பகுதி வெளிவந்தால் அதுவும் இதே அளவு வசூலை கொடுக்கும் என்றால் இரண்டு மடங்கு லாபத்தை இவர் தயாரிப்பாளருக்கு பெற்றுக் கொடுத்து விடுவார்.

அப்போது திரை உலகமே மணிரத்தினத்தின் இந்த சாமர்த்தியத்தை  மெச்சி உள்ளார்கள். மேலும் இவர் ஒரே படத்தில் மொத்த வசூலையும் வாரி எடுத்து விட்டார் என்று இவரது புத்திசாலித்தனத்தை எண்ணி மகிழ்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …