நல்லபடியா திருமண முடிஞ்சது…. அடுத்தது ஹனிமூன் … மனம் திறந்து பேசிய மஞ்சிமா மோகன்…!!

வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் உடன் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் எங்கு செல்வது என்பது பற்றிய பிளானை சமீபத்திய பேட்டி ஒன்றில் மஞ்சிமா மோகன் மிகவும் நேர்த்தியான முறையில் கூறி இருப்பது அனைவரிடமும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன் தமிழில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

 இந்த படத்தில் இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்ததின் மூலம் இவரது நடிப்புத் திறன் வெளியே வந்தது. அடுத்து 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த மஞ்சி மாவுக்கு அவரோடு காதல் மலர்ந்தது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த இவர்கள் ஆரம்பத்தில் இவர்களின் லவ்வை ஒத்துக் கொள்ளவில்லை.

எனினும் காலகட்டங்கள் மற்றும் சந்தரப்பம் இவர்கள் காதலை உறுதி செய்ய உறுதி செய்த நிலையில் தற்போது தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

 மேலும் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தார்கள். இந்த திருமணத்திற்கு ஜீவா, விக்ரம் பிரபு, பாலாஜி, சுரேஷ், ப்ரியா பவானி சங்கர், இயக்குனர் மணிரத்தினம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 இதனை அடுத்து திருமணம் முடிந்த நிலையில் அடுத்ததாக ஹனிமூன் பிளான் செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது கௌதம் கார்த்திக் பத்து தல பட சூட்டிங் இல் பிஸியாக இருப்பதால் ஹனிமூன் பற்றி தற்போது யோசிக்கவில்லை என்றும் கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு விடுமுறையின் போது ஹனிமூன் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மஞ்சுமா தெரிவித்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …