மாரிமுத்து இறந்தது இயற்கை அல்ல.. இதனால் தான் இறந்தார்.. குண்டை தூக்கி போட்ட ட்ரெண்டிங் சாமியார்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மக்கள் மனம் கவர்ந்தவர் மாரிமுத்து. சில படங்களில் வில்லனாக, சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் மாரிமுத்து.

மாரிமுத்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது வட்டார மொழி பேச்சும், இயல்பான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

மாரிமுத்து

இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மாரிமுத்து. அப்போது மற்றொரு உதவி இயக்குநராக இருந்தவர் எஸ்ஜே சூர்யா. அதனால் மாரிமுத்துவும் எஸ்ஜே சூர்யாவும் நெருங்கிய நண்பர்களாக ஒரு காலகட்டத்தில் இருந்துள்ளனர்.

கண்ணும், கண்ணும் மற்றும் புலிவால் என்ற 2 படங்களை இயக்கிய மாரிமுத்து, பின் நடிகராக சில படங்களில் நடிக்கத் துவங்கினார். கொம்பன், டாக்டர், மருது, பரியேறும் பெருமாள், சங்கத் தமிழன், காட்பாதர், நான் சிரித்தால், லாபம், கடைசியாக ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

எதிர்நீச்சல்

ஆனால் மாரிமுத்துவுக்கு சினிமாவை விட அதிக பெயரை, செல்வாக்கை, புகழை தேடித்தந்தது சன் டிவியில் அவர் நடித்த எதிர்நீச்சல் என்ற சீரியல்தான். அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் ஒரு அடக்குமுறை கணவராக அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்:  சமந்தா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே எல்லோரும் வாய்ப்புக்காக இதை பண்றாங்க.. அஞ்சலி ஓப்பன் டாக்..

ஆதி குணசேகரன்

ஒரு விதத்தில் மனைவியை அடிமைப்படுத்தி, டார்ச்சர் செய்யும் கணவர் கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் பெண்களுக்கு அவர் மீது அதிக கோபம், வெறுப்பு ஏற்பட்டது என்றாலும், ஆதிகுணசேகரன் ஒரு கேரக்டராக அந்த நடிப்பை மிக சிறப்பாக செய்தார் நடிகர் மாரிமுத்து.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் சென்ற மாரிமுத்துவின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் உயிரிழந்த நிலையில், டாக்டர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது இழப்பு தமிழ் சினிமாவிலும், குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் அவரது நடித்த அந்த ஆதி குணசேகரன் கேரக்டருக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்த கேரக்டரில் இப்போது நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரண்டிங் சாமியார்

மாரிமுத்து மறைவு குறித்து சமீபத்தில் டிரண்டிங் சாமியார் ஒருவர் நேர்காணலில் கூறியதாவது,

நடிகர் மாரிமுத்து இறந்தது, பலரும் உடல்நலக்குறைவு, மாரடைப்பு என்கின்றனர். அது இயற்கை மரணம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல.

விதிப்பது நடந்தது கிடையாது

இது அவரோட விதிப்படி நடந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது விதிப்படி நடந்தது கிடையாது. அவர் ஒரு சீரியலில் கேரக்டராக நடித்திருக்கிறார். ஆனால் அந்த சீரியல் இந்தியாவில் உள்ள எல்லோருடைய வீடுகளில் ஓடக்கூடியது. மக்கள் தினமும் பார்க்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  பத்து நாள் கூட இது இல்லாம தூங்குனது இல்ல.. திவ்யதர்ஷினி கண்ணீர்..

அந்த சீரியலில் அவர் முழுக்க முழுக்க பெண்களை வற்புறுத்துபவராக, டார்ச்சர் செய்பவராக நடிக்க வைத்திருக்கின்றனர். பெண்களை கொடுமைப்படுத்தும் ஒரு மனிதராக அந்த சீரியலில் மாரிமுத்து இருந்திருக்கிறார்.

டார்ச்சர் பண்றானே..

அப்போது ஊரில் உள்ள எல்லோருமே அந்த சீரியலை பார்க்கும்போது, மாரிமுத்துவை காட்டும்போது இவனுக்கு ஒரு சாவு வராதாடா, இப்படி பொம்பளைங்களை டார்ச்சர் பண்றானே என்று வாய் வழியாக சொன்ன அபசகுண வார்த்தைகளால்தான் அவர், இறந்து போனார் என்று கூறியிருக்கிறார் அந்த டிரணெ்டிங் சாமியார். அது இப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதனால் மாரிமுத்து இறந்தது இயற்கை அல்ல.. பலர் விட்ட சாபத்தால் தான் அவர் இறந்தார் என குண்டை தூக்கி போட்டிருக்கிறார் ட்ரெண்டிங் சாமியார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …