கடந்த 1994ம் ஆண்டில் வெளிவந்த நாட்டாமை படத்தில், தாத்தா நான் பார்த்தேன் என்று மழலை குரலில் பேசியவர் மாஸ்டர் மகேந்திரன்.
பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் நாட்டாமை விஜயகுமாரிடம் பேசும் சிறுவனாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன்.
அதன்பிறகு தாய்க்குலமே தாய்க்குலமே, மகாபிரபு, வாய்மையே வெல்லும், கும்பகோணம் கோபாலு, மின்சார கண்ணா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என பல படங்களில் சிறுவனாக நடித்திருப்பார்.
இப்படி நடித்த வகையில் இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை மாஸ்டர் மகேந்திரன் பெற்றிருக்கிறார்.
அதே போல் இரண்டு முறை மத்திய அரசின் சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருதும் பெற்றிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.
கடந்த 2013ல் வெளியான விழா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்தார்.
ஆனால் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனம் கவர்ந்ததை போல, கதாநாயகனாக மகேந்திரனால் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க முடியவில்லை.
அதனால் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் படங்களில், சின்ன சின்ன ரோல்களில் மகேந்திரன் நடித்து வருகிறார்.
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் கல்லூரி வகுப்பறை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அப்போது, விஜய் அண்ணா செம எனர்ஜி அவர். தமிழ்நாட்டில் உள்ள நடிகர், நடிகையர், வடமாநில நடிகர், நடிகையர் பலரும் விஜயுடன் நடிக்க ஆசைப்படுகின்றனர்.
இதான் நிதர்சமான உண்மை . .இதனால் தான் @rajinikanth ரசிகர்களுக்கு வயித்தெரிச்சல் .. #VijayKollywoodBoxOfficeKing@actorvijay #TheGreatestOfAllTime pic.twitter.com/ZOIoTqanTP
— Pokkiri Madhan 😎 (@Pokkiri_Madhan) January 24, 2024
அவர் ஒரு ராஜாவை போன்றவர். எல்லாவற்றிலும் பர்பெக்ட்டாக இருப்பார்.
அப்பா டைரக்டர், அம்மா பாடகர், நிறைய வசதிகள் இருந்தும் வாழ்க்கையில் நிறைய அவமானங்களை பார்த்து வளர்ந்தவர்.
நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார் அவர்களுடன் எல்லாம் சமமாக நின்று, அதற்கு பிறகு ரஜினி எல்லாம் தாண்டி ஓவர்டேக் செய்து சென்று விட்டார். அது ரேஸ் மாதிரி, ரஜினி, கமல் எல்லோரையும் ஓவர்டேக் செய்துக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு பேசி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோரை மட்டும் தட்டுவது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் அவருடைய நோக்கம் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனை மட்டம் செய்வது கிடையாது, நடிகர் விஜய் பெருமைப்படுத்துவது தான்.
என்றாலும் கூட இவருடைய இந்த பேச்சு கமல் ரசிகர்களையும் ரஜினி ரசிகர்களையும் கோபத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.
அதனால் அவரை, நீ எல்லாம் இடுப்பு உயரம் இருக்கும் போதே, அவர்கள் எல்லாம் உச்சத்தில் இருந்தவர்கள் என்று கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் கடுமையான கருத்துக்களை பதிவு செய்து மகேந்திரனை விளாசித் தள்ளி வருகிறார்கள்.