“ரொமான்ஸை தூண்டும் மல்லிகை பூ..!” – நம்ப முடியாத மருத்துவ குணங்கள் பாக்கலாமா?

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகள் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்காத தமிழகத்தில் இளைஞர்களை இல்லை என்று கூறும் அளவுக்கு மல்லிகை பூவில் தன்மையை எடுத்துக் கூறிய பாடல் வரிகள் என்று கூறலாம்.

 பெண்கள் விரும்பி அணியக்கூடிய இந்த மல்லிகை பூவை நீங்கள் சூதுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி என்ன மல்லிகை பூவில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 மல்லி பூவில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணம்

மலர் மருத்துவத்தில் மல்லிகைப்பூ நோய்களை குணமாக்கக்கூடிய அருமருந்தாக பயன்படுவதாக சித்த மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

 மல்லிகைப்பூ மொட்டுக்களை கண் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்த மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பனங்கற்கண்டை சேர்த்து பருக கண்களில் ஏற்படக்கூடிய சதை வளர்ச்சி குறைந்துவிடும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

 பிள்ளை இல்லாத தம்பதிகள் மல்லிகை தோட்டத்தில் உலவி வந்தால் அந்த நறுமணம் அவர்களின் உடலுக்குள் சென்று ஹார்மோன்களில் இருக்கக்கூடிய ஏற்றத் தாழ்வுகளை குறைத்து குழந்தை பெறும் வாய்ப்புகளை அதிகரித்து தருமாம்.

 அப்படி தோட்டத்திற்கு செல்ல முடியாதவர்கள் மல்லிகை பூவை தைலம் ஆக மாற்றி அந்த வாசனை திரவியத்தை படுக்கையில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

 மல்லிகை பூவை அரைத்து உடலில் வீக்கம் இருக்கும் பகுதிகள் மற்றும் எரிச்சல் நமச்சல் எடுக்கும் பகுதிகளில் பூசி வந்தால் எளிதில் குணமாகும். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் மல்லிகைப் பூவை நீரில் போட்டு காய்ச்சி குடிக்கலாம் அல்லது பொடி செய்து அந்த பொடியோடு நீரை சேர்த்து குடிக்கலாம். அவ்வாறு செய்யும் போது சிறுநீரக கற்கள் வெளிவருவதோடு சிறுநீரக எரிச்சல் போன்றவை நீங்கும்.

 வயிற்றில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற இந்த மல்லிகை பூ கஷாயம் உதவி செய்கிறது. அது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனையை சரி செய்ய கூடிய தன்மை இந்த மல்லிகை பூ கசாயத்திற்கு உள்ளது.

 நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மல்லிப் பூவே நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை டீ போல் குடித்து வர அல்லது தேனில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

 பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது ஏற்படும் வலிகள் குறைய மல்லிகை பூவை கொதிக்க வைத்து குடித்தால் போதுமானது .மல்லிகை பூவிலிருந்து பெறப்படக்கூடிய எண்ணெய் கர்ப்பப்பையை உறுதியாக கூடிய சக்தி பெற்றது.

 அது மட்டுமல்லாமல் பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கும் இது வழி செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த மல்லிகை பூ இருமல்,சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

 குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவஸ்தைப்படும் தாய்மார்கள் மல்லிகை பூவை கொண்டு நிவாரணம் பெற முடியும்.

 மார்பில் கட்டி உள்ள தாய்ப்பாலை வெளியேற்ற அந்த வலியை நீக்க மல்லிகை பூ மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதற்காக மல்லிகை பூவை அரைத்து நீங்கள் உங்கள் மார்பு பகுதியில் போட்டால் போதும் மூலம் பால் சுரப்பு படிப்படியாக குறைந்து வழியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …