செண்பகம்

இரண்டு செண்பக மரத்தை வளர்த்து வந்தால் சொர்க்கத்தை காணலாம் என்று பிரம்மபுராணங்களில்சொல்லப்பட்டுள்து.இதன் மலர் சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த மலர் இந்த மரத்தை வீட்டில் வளர்க்க இதன் பூக்கள் வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும்.

இதற்கு செளபாக்கிய விருட்சம் என்ற பெயரும் உண்டு வீடுகளில் வளர்க்கப்படும் செண்பக மரத்திற்கு செவ்வாய் கிழமைகளில் பூஜை செய்து வந்தால் வளமோடு வாழலாம். இதன் பத்து பூக்களை பாடம் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வீடுகளில் கடைகளில் வைக்க செல்வ வளம் கிடைக்கும் .

 மருத்துவ குணம் 

செல் போன் அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் அயர்ச்சிக்கு இரவில் தூங்கும் போது இதன் பூக்களை கண் இமைகளின் மேல் வைத்து கட்டி கொள்ள கண் பார்வை தெளிவாகும் பார்வை குறைபாடு நீங்கும். கண் சிகப்பு நீங்கும்.

இதன் பூக்களை காய வைத்து காய்ந்த மாதுளை விதைகளை இடித்து இரண்டையும் கலந்து டீ மாதிரி செய்து பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர  பொதுவாக சுகர் கன்ட்ரோல் ஆகும் மன அழுத்தம் நீங்கும் தூக்கம் நன்றாக வரும்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும் விந்தணுக்கள் பலமாகும்.தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பத்து பூக்களை எடுத்து கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு வெயில்  பத்து நாட்கள் வைத்து இருந்து எடுத்து அந்த என்ணெய்யை மூட்டு வலி கைகால் வலி உள்ள இடத்தில் தடவி சுடுநீரில் கழுவ வலி விரைவில் குணமாகும் திரும்ப மூட்டு வலி வராமல் இருக்கும்.

இதே எண்ணெய்யை பாதவெடிப்புக்கு தடவலாம்.பெண்கள் இதன் பூவை தலையில் சூடி வர உடல் சோர்வு மன உளைச்சல் நீங்கும்.‌

இதன் இலைகளை அரைத்து சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

இதில் வெள்ளை மஞ்சள் பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கும்.இதை வீடுகளில் வளர்க்கலாம் தொட்டியிலும் நிலத்திலும் வளர்க்கலாம்.

இதை நடும் போது ஒட்டு பகுதி சுற்றி மணல் கிடைத்தால் போடவும் இல்லை செம்மண் போதும் ஆக ஓட்டு பகுதி மண்ணிற்குல் சென்று விட வேண்டும். வெயில் குறைவாக தான் இருக்க வேண்டும் வெயில் அதிகமாக இருந்தால் கிரீன் நெட் கட்டி விடவும் இயற்கை உரம் கிடைத்தால் போடவும் இல்லை என்றால் அரிசி கழுவிய நீரை புளிக்க வைத்து ஊற்றி வந்தால் போதும் நன்றாக பூக்கும்.

 

இதை வீடுகளில் தொழிற்சாலைகளில் வளர்க்க சுத்தமான காற்றை நமக்கு தரும் திருநாகேஸ்வரம் ,திருச்சேறை ஆகிய சிவன் திருமால் கோவில்களில் தல விருட்சமாக உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …