என்ன சொல்றீங்க..? – இவ்வளவு சீக்கிரமாவா..? – இரண்டாவது திருமணம் பற்றி வாய் திறந்த மீனா..!

நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, அஜீத் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர்.

இவரது கணவர் வித்யாசாகர், சில மாதங்களுக்கு முன் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா ’தெறி’ படத்தில், விஜய் மகளாக நடித்திருப்பார்.

நடிகை மீனாவுக்கு, வயது 40 களை கடந்தும் தமிழ் சினிமாவில் இன்னும் மவுசு குறையவில்லை. கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பின், படங்களில் நடிக்காமல் சற்று இடைவெளி விட்டிருந்த மீனா, பழையபடி தற்போது சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

கணவரின் மறைவால் ஏற்பட்ட வேதனையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், அதிலும் சிலர், அவர் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், பலரும் ‘கொளுத்திப் போட்டு’ வருகின்றனர்.

இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை மீனா பதிலடி தந்திருக்கிறார்.

இதுபற்றி மீனா கூறுகையில், எனது கணவர் இறந்து விட்டார் என்பதையே இன்னும் என்னால் நம்ப முடியாத மனநிலையில், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எதற்காக, இப்படி நான் 2வது திருமணம் செய்துகொள்வதாக, பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்றே எனக்குத் தெரியவில்லை.

 

என்னுடைய எண்ணம் எல்லாம், எனது மகள் நைனிகாவுக்கு, சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும். நல்ல கதைகள் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது மட்டும்தான். மற்றபடி, திருமணம் பற்றி எல்லாம் யோசிக்க கூட இலலை, என்று கூறி இருக்கிறார்.

மீனாவை பொருத்தவரை, கணவர் வித்யாசாகர் மீது அபரிமிதமான அன்பும், காதலும் கொண்ட மனைவியாக வாழ்ந்திருக்கிறார். கணவரின் மறைந்து விட்டார் என்பதையே இன்னும் மனதளவில் ஏற்றுக்கொள்ளாத அவர், நிச்சயம் 2வது திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை, என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …