கணவர் மரணம்..! – நடிகை மீனா செய்த அதிரடி விஷயம்..! – குவியும் பாராட்டுகள்..!

 தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மிகச் சிறப்பான முறையில் நடித்து பெயர் பெற்றவர். நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு இணைந்து நடித்த இவர் பின்பு ரஜினிக்கு ஜோடியாக முத்து படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இவர் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமலஹாசன் போன்ற 90களில் நடித்த நடிகர்களோடு அதிகமான படங்களில் நடித்த இவர்  தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.

 இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையும் தற்போது திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். திருமணத்திற்குப் பின்னால் விஜய்டிவி மற்றும் ஏனைய தனியார் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய பணியை மேற்கொண்டு வந்தார்.

மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் புயல் வீசுவது போல இவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இறப்புக்குக் காரணமாக நுரையீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றும் மாற்று நுரையீரல் கிடைத்திருந்தால் இவரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.

 எனினும் மாற்று நுரையீரல் கிடைக்காத காரணத்தால் அவர் கணவர் உயிர் விடுத்ததை அடுத்து மீனா அதிரடி முடிவு இறங்கியிருக்கிறார். அது என்னவென்றால் தான் இறந்த பின்பு தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதற்கான பத்திரத்தை இப்போதே எழுதி வைத்துவிட்டார்.

இதுபோலவே திரையுலகில் பல பிரபலங்கள் செய்து வந்திருந்தாலும் மீனா தற்போது எடுத்திருக்கின்ற இந்த தைரியமான முடிவை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

 சரக்கு வச்சிருக்கேன் … இறக்கி வச்சிருக்கேன்… என்ற ஐட்டம் சாங்கில் இவர் ஒரு கலக்கு கலக்கி இருப்பார். அதையும் தாண்டி இப்போது இவர் செய்திருக்கக் கூடிய இந்த செயலானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பு வரவேற்போடு நின்றுவிடாமல் இதை அவர்கள் ஃபலோ செய்தார்கள் என்றால் நிச்சயம் பல உயிர்கள் காப்பாற்றப்படும். அதற்கு மீனா ஒரு  வழிகாட்டியாக இருந்தார் என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …