தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகச் சிறப்பான முறையில் பல படங்களில் நடித்தவர் கண்ணழகி மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது கணவரான வித்யாசாகரின் மறைவைத் தொடர்ந்து இவர் அதிலிருந்து வெளியே வருவதற்காக திரைப்படங்களில் நடிப்பதில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் மீனா மற்ற நடிகைகள் போலவே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிக ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
இவர் சமீபத்தில் வெளிவந்து இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசுகையில் தனது கனவை வெளிப்படையாக கூறினார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகை மீது இவருக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
அந்த கதாபாத்திரம்தான் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு கேரக்டர் என்று சொல்லலாம். அது உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கேரக்டர்தான்.
இந்த நந்தினி கேரக்டரை மீனா நடிக்க வேண்டும் என்று பல நாள் கனவோடு இருந்திருக்கிறார். இந்த கனவை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் எத்தனை நாள்தான் இதை நான் ஒளித்து வைத்து இருக்க முடியும். எனவே தான் இப்போது கூறுகிறேன் என்று விளக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் சியான் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி சரத்குமார் பார்த்திபன் பிரகாஷ்ராஜ் பிரபு ஜெயராம் விக்ரம் பிரபு கிஷோரி லால் ரகுமான் சோபிதா துளி பாலா போன்ற எண்ணற்ற நட்சத்திர பட்டாளங்கள் சோழர் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லக்கூடிய நட்சத்திரங்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
மேலும் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யாராயை டேட் செய்ததோடு இந்த கனவு கதாபாத்திரத்தில் எனக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனினும் ஐஸ்வர்யாராய்க்கு கிடைத்த வாய்ப்புக்காக நான் பொறாமைப் படுகிறேன் என்று ஜாலியாக எழுதியிருக்கிறார்.
இந்த பதிவானது தற்போது அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.