ஆண் நண்பருடன் தனிமையில் மருதமலை பட நடிகை Meera Chopra..? இணையத்தில் லீக் ஆன வீடியோ..?

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வந்த வேகத்திற்கு சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். இத்தனைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தும் கூட அவர்களுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும்.

அப்படியாக முதல் படத்திலேயே அதிக வரவேற்பு பெற்று சினிமாவில் நடிக்க முடியாமல் வாய்ப்புகளை இழந்தவர் நடிகை மீரா சோப்ரா. நடிகை மீரா சோப்ரா பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ராவின் சொந்தக்காரர் ஆவார்.

தமிழில் முதல் படம்:

இவரை நிலா என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழியிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீரா சோப்ரா. தமிழில் முதன்முதலாக அன்பே ஆருயிரே திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் அறிமுகமானார்.

அப்பொழுதிலிருந்து அவரது பெயர் நிலா என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படத்தின் மொத்த கதையும் காதல் கதை என்பதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அமைப்பை கொண்டிருந்தது.

இதனால் மீரா சோப்ராவிற்கும் இந்த திரைப்படம் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தமிழில் ஜாம்பவான், மருதமலை போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் மீரா சோப்ரா. இருந்தாலும் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.

ஃபீல்ட் அவுட்:

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்புகளை பெற்று வந்தார் மீரா சோப்ரா. அதற்கு பிறகு அவரை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லை.

பலரும் மறந்துவிட்ட ஒரு நடிகையாக மீரா சோப்ரா ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் மீரா சோப்ரா தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் கமிட் ஆகாமல் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் மீரா சோப்ரா.

இந்த நிலையில் அவரை குறித்த வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை மீரா சோப்ராவின் ஆபாச வீடியோ ஒன்று லீக் ஆனதாக கூறி ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

பிறகு அந்த வீடியோ அவசர அவசரமாக நீக்கப்பட்டும் உள்ளது. ஒருவேளை ராஸ்மிகா மற்றும் சமந்தாவை வைத்து செய்ததை போல இந்த வீடியோவும் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் மீரா சோப்ரா தரப்பிலிருந்து இன்னும் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …