ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைப்பட அறிமுகமான நாயகி நீதான் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழ்த்திரையுலகில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இவரை பார்த்ததுமே பற்றிக் கொள்ளுமளவுக்கு கிளாமரில் ரசிகர்களின் இதயங்களை கொல்லும் இவரை பலமுறை கொலை செய்வதற்கு சதித் திட்டங்கள் பல நடந்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை சமீபத்தில் முன்வைத்துள்ளார்.
மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் மிஸ் இந்திய அழகிப் பட்டம் பெறுவதற்கும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் தனது படுக்கையை அட்ஜஸ்ட் செய்ததாக ராக்சி சாவந்த் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் இவருக்கு பல ஆண்களோடும் பெண்களோடும் உடல் ரீதியான தொடர்புகள் உள்ளது என அப்பட்டமான உண்மையை முன்வைத்திருக்கிறார்.
இதனையடுத்து நடிகை தனுஸ்ரீ தத்தா, காலா பட வில்லன் நானா படேகர் என்னுடைய அந்த உறுப்பில் கை வைத்து தகாத முறையில் நடந்து கொண்டார் என்றும், மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீது Metoo புகார்களை அளித்தார். மேலும் இந்த விசாரணையில் இந்த புகார்களுக்கு ஆதாரம் இல்லாததால் இது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தான் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலுக்குச் செல்லும் போது எனது காரில் இருந்த பிரேக்கை கட் செய்ததால் தான் விபத்து எனக்கு நேரிட்டது என்ற உண்மையை கூறினார்.இது ஒரு கொலை முயற்சி.
மேலும் தன்னை கொலை செய்வதற்கு பல சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள் என்ற செய்தியை அவர் விளக்கமாக கூறியிருக்கிறார். இவரை கொள்வதற்கு தண்ணீரில் விஷம் வைத்தார்கள் என்றும் மேலும் இவரது கார் பிரேக்கை கட் செய்து பலமுறை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் போன்ற அதிர்ச்சிகரமான விஷயங்களை அவர் தற்போது வெளிப்படுத்தி இருப்பதைப் பார்க்கும்போது அனைவருக்கும் சற்று திகிலாகவும், பயமாகவே இருந்தது.
Metoo புகார் அளித்ததன் காரணமாகத்தான் தன்னை மேலும், மேலும் கொலை செய்வதற்கு எல்லோரும் முயற்சிக்கிறார்கள் என்பது போன்ற கருத்தை இவர் ஊடகத்தின் தெரிவித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.