விவகாரமான கேட் ஆப்பில் புதிதாக சமுகத்திற்கு எதைப்பற்றி சொல்ல வருகிறார் நவீன பகாசுரன்.

சமுதாயத்தில் நடக்கின்ற அத்தனை விஷயங்களையும் தனது படத்தில் மிகச் சிறப்பாக  பதிவு செய்து மக்களுக்கு காட்டுவதில் கைதேர்ந்த கெட்டிக்கார இயக்குனர் தான் மோகன் ஜி அவர்கள். இதற்கு உதாரணமாக அவர் முன்பு இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை கூறலாம். 

இவர் படத்தில் ஏதாவது ஒரு செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவார். இந்த வரிசையில் இயக்குனர் மோகன் ஜி தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் மகாபாரத புத்தகத்திற்கு கீழே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”  என்ற வார்த்தைகள் இடம் பெற்று உள்ளது. இதை பற்றி மோகன் ஜி கூறுகையில் சிவன் துணை இருக்கும் ஆனால்  நிச்சயமாக “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று கூறினார்.இதற்கு காரணம் பகாசுரன் மகாபாரதத்தின் உப கதை ஒன்றில் வரும் நாயகன் நாயகனின் பெயரைத்தான் இந்த படத்திற்கு சூட்டியிருக்கிறார்கள்.

தனது தம்பி தனுஷை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவனை இந்தப் படத்தில் நீங்கள் நிச்சயமாக  வித்தியாசமான  தோற்றத்தில் பார்க்கலாம். 

ஏற்கனவே சாணி காகிதம் டீஸ்ட் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை மிகச் சிறப்பான முறையில் வெளிபடுத்தியிருக்கிறார் செல்வராகவன். இவரது மிகச்சிறந்த நடிப்பை ரசிகர்கள் மிக ஆவலாக இந்தப்படத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் நடிகர் ராதாரவி, கே. ராஜன் போன்றோர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இந்தப் படத்துக்காக சாம்.சிஎஸ்  இசையமைத்துள்ளார்.

 இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில் இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பகாசுரனின் மிரட்டல் டிசரை 28.08.22 அன்று படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இப்போது எந்த ஃப்ரீசர் ஆனது ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி  இன்னும் பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …