மிருணாள் தாகூர் (Mrunal Thakur) சீதா ராமம் என்ற ஒரே படத்தில், ரசிகர்கள் மத்தியில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தில் ஒரு ராணிக்கும், ராணுவ வீரருக்கும் ஏற்படும் காதலை, மிக அழகாக சொல்லிய இந்த கதை ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.
துல்கர் சல்மானின் நடிப்பும், மிருணாள் தாகூரின் அழகும், கதையின் கருவும், அதை சொன்ன விதமும், கதையோட்டமும், படத்தின் காட்சியமைப்பும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.தமிழில் அறிமுக நாயகியாக இருந்தாலும் மிருணாள் தாகூர் தெலுங்கு, மராத்தி, இந்தி என பிறமொழி படங்களில் நிறைய நடித்திருக்கிறார்.
முதலில், மிருணாள் தாகூர் கவனம் செலுத்தியது, சின்னத்திரையில்தான். முஜ்சே குச்கெஹ்தி யே காமோஷியான் என்ற இந்தி சீரியல் 2012ம் ஆண்டில் வெளிவந்தது. அடுத்து, குங்கும் பாக்யா என்ற இந்தி சீரியல் 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரைதொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
ந்த இந்தி சீரியல்களில் மிகச்சிறந்த நடிப்பை, மிருணாள் தாகூர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடர்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்ச்சன ரீதியாகவும், மிருணாள் தாகூர் பாராட்டுகளை பெற்றார்.இதனால், 2015ம் ஆண்டில் சிறந்த துணை நடிகைக்கான ஐடிஏ விருது பெற்றார்.
மிருணாள் தாகூர் மகாராஷ்டிரா, துலேவில் பிறந்தவர். இப்போது 31 வயதை கடந்திருக்கிறார்.இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகையாக ஏற்கப்பட்ட நிலையில், லவ் சோனியா என்ற 2018ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தி படம் ஒன்றில் அறிமுகமானார்.
அடுத்து வாழ்க்கை வரலாறு படங்களான சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் ஆகிய இந்தி படங்களில் நடித்து, இந்தி படவுலகில் நல்ல நடிகையாக அங்கீகாரம் பெற்றார். ஆனால், இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
Mrunal Thakurரசிகர்களால் பாராட்டைப் பெற்ற படங்களாக இந்த படங்கள் அமையவில்லை. தோல்வி படங்களாக போய்விட்டது. தொடர்ந்து இந்தி டிவி தொடர்களில் மிருணாள் தாகூர் நடித்து வந்த நிலையில், அந்த தொடர்களுக்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, தெலுங்கு மொழியில் காதல் படமான, சீதா ராமம் என்ற படத்தில், துல்கர் சல்மானுடன் நடித்தார். கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்த இந்த படம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. காதலை, மையப்படுத்திய இப்படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வரவேற்பு அளித்தனர்.
மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கானில் துவக்க கால பள்ளி படிப்பையும், தொடர்ந்து மும்பையில் உயர்நிலை பள்ளி படிப்பையும் மிருணாள் தாகர் நிறைவு செய்தார். டிவிகளில் தொடர் நடிப்பால், கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, வெளியேறினார்.
Mrunal Thakur2014ம் ஆண்டில், விட்டி தண்டு என்ற மராத்தி படத்தில் நடித்து அறிமுகமானார். அடுத்து, சுராஜ்யா என்ற படத்திலும் நடித்தார். மிருணாள் தாகூர், நடிப்பின் மீது மிகுந்த அக்கறை, ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
அதனால் இந்தியில், லவ் சோனியா என்ற படத்தில் நடித்த போது, கொல்கத்தா விபசார விடுதியில் தங்கி, அங்கு இருந்த பெண்களின் உடல்மொழி அறிந்து கொண்டுள்ளார்.
Mrunal Thakurதொடர்ந்து, சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மிருணாள் தாகூர் சோஷியல் மீடியாவில் மிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விடுகிறார்.
இப்போது, அவரது இந்த எல்லை தாண்டிய கவர்ச்சி படங்களை பார்த்து ரசிகர்கள், திக்குமுக்காடி போய் விடுகின்றனர். அந்தளவுக்கு, இந்த புகைப்படங்களில் கவர்ச்சியில் மிருணாள் தாகூர் மிரட்டுகிறார்.