முத்துப்பேட்டை சோமு பாஸ்கர் என்கிற எம் எஸ் பாஸ்கர் கடந்த 1957ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர். தன்னுடைய இருபதாவது வயதில் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.
இயக்குனர்களுடன் தன்னுடைய நெருக்கத்தை வளர்த்துக் கொள்வது, சக நடிகர்களுக்கு மரியாதை கொடுப்பது, பணிவாக நடந்து கொள்வது, நல்ல குணம், அதையும் தாண்டி எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி திரையில் நடித்துக் காட்டக்கூடிய ஒரு நடிகர் எம் எஸ் பாஸ்கர்.
இதுவரை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படத்தில் இளம்பறிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கனகச்சிதமாக அந்த கதாபாத்திரத்தை திரைக்கு கொண்டு வந்திருந்தார். ஒரு வீடு அந்த வீட்டில் ஒரே ஒரு கார் நிறுத்த நிறுத்தும் அளவுக்கு இருக்கக்கூடிய பார்க்கிங் ஏரியா.
கீழ் வீட்டில் எம் எஸ் பாஸ்கர், மேல் வீட்டில் ஹரிஷ் கல்யாண். இந்த ஒரே ஒரு கார் நிறுத்தும் இடத்தில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய காரை கொண்டு வந்து பார்க் செய்கிறார்.
ஆரம்பத்தில் ஹரிஷ் கல்யாணுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இருக்கும் சுமுகமான உறவு நாளாக நாளாக கடினமாகி இருவருக்குள்ளும் கடுமையான சண்டைகள் ஏற்படுகின்றன.
இதனை தொடர்ந்து இந்த பார்க்கிங்கை ஹரிஸ் கல்யாண் பயன்படுத்தவே கூடாது என்பதற்காக எம்.எஸ்.பாஸ்கர் செய்யக்கூடிய வில்லத்தனங்கள் படத்தை விறுவிறுப்பாக காட்டி இருந்தது.
தன்னுடைய 66 வயதிலும் ஒரு கதாபாத்திரத்தை அப்படி உள்வாங்கி நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பலருக்கும் இவரை பட்டாபி என்று அடையாளம் தெரியும். சமீபத்தில் தான் இவருடைய பெயர் எம் எஸ் பாஸ்கர் என்று பலரும் அறிந்து இருப்பார்கள்.
ஆனால், தலையில் முடியுடன் இருக்கும் எம்எஸ் பாஸ்கரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். தலையில் முடியுடன் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகிய வருகின்றது.