நதியாவின் பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து கேரளாவின் தலசேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்.
1984-ல் பாசில் தனது, நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். ஷரீனா மொய்து என்ற அவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று அவருக்கு பெயர் வைத்தார்.
பிறகு அதுவே அவரது பெயராக நிலைபெற்றது.நதியா தான் காதலித்தவரையே திருமணம் செய்து இரு மகள்களுடன் செட்டிலாகிவிட்டார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியியின் மூலம் அமைந்த அவரது இரண்டாவது வருகையும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
80’ஸ்களில் அவருடன் இணைந்து நடிக்க இந்தியாவிலுள்ள முன்னணி நடிகைகள் அனைவரும் தயாராக இருந்தனர். அந்த காலகட்டத்தில் கமலுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்த ஒரே ஒரு நடிகை நதியா.
புடவை.. சுடிதார்.. கொண்டை..
நதியா புடவை, நதியா சுடிதார், நதியா ஹேர் ஸ்டைல், நதியா கொண்டை, நதியா ஹேர்கிளிப் என்று பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் நதியா பெயரில் வெளிவர ஆரம்பித்தன. நதியா பெண்களின் பிராண்ட் அம்பாசிடர் ஆனார்.
தமிழ் சினிமாவில் பெண்களிடையே உடைக்காகவும், ஸ்டைலுக்காகவும், தோற்றத்துக்காகவும் புகழபெற்ற முதல் நடிகை நதியா எனலாம்.இப்படியொரு நடிகையை கமலுடன் ஜோடியாக நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் யாருக்கும் எழும்.
கமல் படத்தில் நடிக்க நதியாவுக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், கமலுடன் நடிக்க நதியா மறுத்தார். சோசியல் மீடியா இல்லாத அந்த காலத்திலேயே இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.புன்னகை மன்னன் வெளியானது.
லிப் லாக்கிற்கு பயந்து..
படம் பார்த்தவர்கள் படத்தைவிட்டு விட்டு ரேகாவுக்கு கமல் கொடுத்த முத்தத்தையே வியந்து பேசிக் கொண்டார்கள். ஊடகங்களும் அந்த முத்தத்திற்கே முக்கியத்துவம் அளித்தன.
கமல் தன்னுடன் நடிப்பவர்களின் உதடுகளில் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் முத்தமிடுவார் என்பது போன்ற முத்தக் கதைகள் தினம் தினம் வந்து கொண்டிருந்தன.
கமல் படம் என்றால் உதட்டு முத்தம் உறுதி என்ற நிலை இருந்ததால் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை நதியா உதறினார். லிப்லாக் பயமே இதற்கு காரணம். பிறகு அவர் அளித்த பேட்டியில், கமலுடன் நடிக்க முடியயாமல் போனது குறித்து வருத்தப்பட்டிருந்தார்.