இரண்டு குழந்தைகளுடன் 6 அடி வெள்ளத்தில் தத்தளிக்கும் நடிகை நமீதா..!

நிஜாம் புயல் காரணமாக பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை நமீதா தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டிற்குள் வெள்ளம் பாய்ந்து இருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல பிரபலங்களும் உதவி கரம் நீட்ட முன் வந்திருக்கின்றனர். அதேபோல திரைப்பிரபலங்களும் இந்த புயல் வெள்ளத்தால் சிக்கியுள்ள காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

நடிகர் விஷால் தன்னுடைய வேதனையை சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், நடிகை நமீதா வீட்டிலும் வெள்ள நீர் புகுந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிகளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை ஏரி கரை உடைந்ததால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பள்ளிக்கரணை மட்டும் இல்லாமல் அதன் அருகில் உள்ள துரைப்பாக்கம் ஏரியாவிலும் வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்து இருக்கின்றது.

நடிகை நமீதா துரைப்பாக்கம் எக்ரெட் பார்க் குடியிருப்பில் வசித்து வருகிறார். தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்துக் கொண்டிருக்கிறார் நடிகை நமீதா.

குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் நிலையில் மீட்பு குழுவினர் இதுவரை அங்கு செல்லாததால் நடிகை நமீதா உட்பட பலரும் தவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *