சூப்பராக சூரத்தில் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்த நமீதா..!!

சூரத் நகரில் இருந்து தமிழ் சினிமாவில் களமிறங்கி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை நமீதா. இவர் வாயில் இருந்து வெளிவரும் மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்காகவே இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்று கூறலாம்.

 அந்த அளவுக்கு அந்த ஒற்றை வார்த்தையால் ரசிகர்களின் இரும்பு இதயத்தை தேனை வர வைக்கக்கூடிய வகையில் பேசிக் கொஞ்சிய பேரழகி நமிதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது இவர் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு தனது சொந்த ஊரான சூரத்தில் பெயர் சூட்டு விழாவில் அது உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடி இருக்கிறார்.

 இதனை அடுத்து இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்ற பெயர் சூட்டப்பட்டு  உறவினர்களால் அழைக்கப்பட்டது. இதுகுறித்து நமிதா தமது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை போட்டிருக்கிறார்.

இதில் தனக்கு கிடைத்த இரட்டை குழந்தைகள் கடவுளால் வழங்கப்பட்ட அற்புதங்கள் எனவும் அந்த குழந்தைகளுக்கு தற்போது கிருஷ்ணா ஆதித்யா கியான் ராஜ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இந்த குழந்தைகளை கடவுள் கிருஷ்ணர் எனக்கு கொடுத்த விலை உயர்ந்த பயிற்சிகளாக கருதுவதாக கூறியிருக்கிறார்.

 மேலும் இந்த காரணத்தை முன்னிட்டு தான் இரண்டு குழந்தைகளுக்கும் கிருஷ்ணரின் பெயரை சூட்டி உள்ளதாக இவர் கூறியிருக்கிறார். இந்த பெயர் சூட்டு விழாவில் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களையும் குழந்தையும் வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் கூறி இருக்கிறார்.

 இதைப் பார்த்து ரசிகர்களும் இவருக்கும் இவரது குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு குழந்தைகள் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ்வதற்கு இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …