அதிகாரியுடன் டேட்டிங்.. ஆடம்பர பரிசுகள்.. சிக்கலில் பிரபல நடிகை நவ்யா நாயர்..!

தன்யா வீணா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை நவ்யா நாயர் என்று மாற்றிக் கொண்டார். மலையாள படங்களில் ஆரம்பத்தில் நடித்த இவர் இதனை அடுத்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

நவ்யா நாயர்..

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து நடிகர் தீலிப்வுடன் கதாநாயகியாக இஷ்டம் படத்தில் 2001 ஆம் ஆண்டு நடித்த பின்னர் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து தனது சிறந்த நடிப்பிற்காக கேரள மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவ பிலிம் பேர் விருதுகளை பெற்றிருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை அழகிய தீயே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு 2009 ஆம் ஆண்டு தேசிய விருதும் கிடைத்தது. முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் அதிக அளவு தமிழ் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தற்போது பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறையிடம் சிக்கி இருக்கிறார்.

அதிகாரியுடன் டேட்டிங்..

அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிபிஐ அதிகாரி சச்சின் சாவந்த் என்ற சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 2.46 கோடி அளவு சொத்து மதிப்பு இருந்ததாக தெரியவந்துள்ளது ஆனால் 2011 ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு வெறும் 1.4 லட்சங்கள் மட்டுமே.

1.4 லட்சங்கள் மட்டுமே இருந்த இவரது சொத்து எப்படி 2022 ஆம் ஆண்டில் 2.1 கோடி ரூபாயாக உயர்ந்தது என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பண மோசடி விவகாரம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கினை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த குற்ற பத்திரிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அதில் இந்த சுங்கத்துறை அதிகாரி செல்போன் சாட்டிங் உரையாடல்கள் உள்ளிட்ட பல விவரங்களை சேகரித்ததின் பெயரில் மலையாள நடிகை நவ்யா நாயருக்கும், சச்சினுக்கும் இடையே உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சம் ஆனது.

அதுமட்டுமல்லாமல் நடிகை நவ்யா நாயருக்கு தேவையான தங்க நகைகள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை சச்சின் சாவந்த் பரிசளித்திருக்கிறார் என்பதை தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த அதிகாரியுடன் நெருங்கி பழகிய நடிகை நவ்யா நாயர் இவருடன் டேட்டிங் சென்று இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்து இருப்பதாகவும், மேலும் 8 முதல் 10 முறை கொச்சினுக்கு இருவரும் தனியாக சென்று இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கக்கூடிய நவ்யா நாயர் பற்றி பல பகீர் தகவல்கள் வெளி வந்ததால் மலையாள திரையுடகமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதனை அடுத்து இதன் உண்மை நிலை என்ன என்பது பற்றி அரசு அதிகாரிகள் நிச்சயம் விரைவில் கண்டுபிடித்து உண்மையை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *