நடிப்பில் மட்டும் நம்பர் ஒன் இல்லை மாமியாரிடமும் நம்பர் ஒன் ஆக ஜொலிக்கும் நயன்தாரா…!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய நயன்தாராவின் நடிப்பை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. இவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர்.

 தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர்.

இந்நிலையில் இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரட்டைக் குழந்தைக்கு வாடகை தாயார் மூலம் தாயான விஷயத்தில் பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் தற்போது தான் அந்த பிரச்சனை சமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.

 ஏற்கனவே பல பிரச்சனைகளை காதலுக்கும், குழந்தைக்கு மத்தியில் சந்தித்து வந்த இவர் எவ்வளவுதான் பிரச்சனைகள் இவரை துரத்தியபோதும் நடிப்பில் விட்டுக் கொடுக்காமல் நம்பர் ஒன் கிளாஸில் எப்போதும்  இருப்பதற்கு காரணம் இவரது திறமை.

அந்த வரிசையில் தற்போது நயன்தாராவின் மாமியார் அதாவது விக்னேஷ் சிவனின் தாயார் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதன் நயன்தாராவை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியதோடு மாமியார் மெச்சிய மருமகளாக இவர் திகழ்வதாக கூறியிருக்கிறார்.

மேலும் பேட்டியில் அவர் கூறியது நயன்தாரா வீட்டில் எட்டு வேலை ஆட்கள் உள்ளார்கள். அதில் ஒரு அம்மாவின் முகத்தைப் பார்த்து நயன்தாரா என்ன பிரச்சனை என்று கேட்டவுடன் பணம் நெருக்கடியை அவர் கூறியிருக்கிறார். உடனே நான்கு லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்ததாக அவரது மாமியார் கூறியுள்ளார்.

 இதற்கு மேலே ஒரு படி சென்று நயன்தாராவின் அம்மா தங்க வளையிலேயே வேலைக்காரர்களுக்கு பரிசாக கொடுத்திருப்பதாகவும் பேசி இருக்கிறார். யாரும் இது போல் உதவி செய்வதில்லை என்ற நோக்கத்தில் நயன்தாரா உதவி செய்வது போல் பாவித்து அவர் பேட்டியை அழைத்து இருக்கிறார்.

 திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்கு பிறகு கூட மாமியார் என்ற ஸ்தானத்தில் இவர் இதுவரை ஊடகங்கள் மத்தியில் வாய் திறந்ததே இல்லை.

ஆனால் தற்போது ஊடகத்துக்கு தைரியமாக எந்த பேட்டியை கொடுத்ததற்கு காரணம் ஒன்று மருமகள் அல்லது மகனின் வேலையாகத்தான் இருக்கும் என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக கூடி இப்படிப்பட்ட காரியங்களை களமிறங்கி செய்யக் கூடியவர் தான் நயன்தாரா என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …