தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்றபோது அவருடைய பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தாய்லாந்து தேனிலவு கொண்டாட சென்ற இருவரும் சமீபத்தில் நாடு திரும்பினர். நாடு திரும்பியவுடன் நடிகை நயன்தாரா பாலிவுட் படத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் நயன்தாராவின் பவுன்சர்கள் நயன்தாராவை புகைப்படம் எடுக்கக் கூடாது என அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.
இதை பார்த்த நயன்தாராவும் பவுன்சர்களை கட்டுப்படுத்தாமல் அவர்கள் போக்கில் விட்டு விட்டார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.
Nayanthara’s Bodygaurds Misbehave With Media, Incident Caught On Video #nayanthara #Spotted #FirstIndiaFilmy pic.twitter.com/4fNxIo77Gv
— First India filmy (@firstindiafilmy) June 28, 2022
பாலிவுட்டில் டாப் ரேஞ்சில் இருக்கும் நடிகைகளே பத்திரிக்கையாளர்களுக்கு பொறுமையாக போஸ் கொடுத்துவிட்டு செல்லும் நிலையில் நடிகை நயன்தாரா பத்திரிக்கையாளர்களை இவ்வளவு மோசமாக நடத்தியதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.