இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள இந்த கூத்து தேவையா நயன்தாரா..? – கடுப்பில் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாராவின் பல காதல் தோல்விகளுக்கு பிறகு ஒரு வழியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னதாக நடிகர் சிம்புவை காதலித்து வந்த நடிகை நயன்தாரா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். இதில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.

ஆனால் நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவை காதலித்த போது நடிகர் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார். தன்னுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியை அம்போ என விட்டுவிட்டு நடிகை நயன்தாரா பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் நடிகர் பிரபுதேவா.

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. நடிகர் பிரபுதேவாவின் மனைவியும் தன்னுடைய ஆதங்கத்தை மீடியாக்கள் மூலம் வெளிப்படுத்தினார். அந்த நேரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் பிரபுதேவாவின் பெயர் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. தன்னுடைய கையில் பிரபு என டாட்டூ குத்திக் கொள்ளும் அளவுக்கு பிரபுதேவாவை காதலித்து வந்தார் நடிகை நயன்தாரா.

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அடுத்த சில மாதங்களில் பிரபுதேவாவை பிரிந்தார் நடிகை நயன்தாரா. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சிம்புவை காதலித்து பிரிந்தது பிரச்சினையில்லை.

ஆனால் பிரபுதேவாவை காதலித்து பிரிந்தது அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை பாதித்து… அவருடைய குழந்தைகளின் மனதையும் அவர்களின் பள்ளி வாழ்க்கையை பாதித்து.. அவருடைய மனைவியை கடுமையாக பாதித்திருக்கிறது.. என்று பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்த பிரச்சனை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா.

ஒருவழியாக திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. தற்பொழுது தேனிலவு கணவரின் பிறந்த நாள் என ஒரு பக்கம் கொண்டாட்டமாகவும் ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை நயன்தாராவின் சமீபத்திய செய்தி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதுதான் நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஒரு ஆவணப்படமாக தயாராக இருப்பது. பொதுவாக நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அவர்கள் மறைந்த பிறகு தான் எடுக்கப்படும்.

ஆனால் நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு நடிகை நயன்தாராவும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் சிறுவயது முதல் அவர் நடிகர் விக்னேஷ் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டது அவருடைய வாழ்க்கை பயணத்தை ஆவணப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது தான் திருமணம் நடந்தது அதற்குள் இந்த ஆவணப்படங்கள் எல்லாம் தேவையா..? இந்த ஆவணப் படத்தில் நடிகர் சிம்பு.. இயக்குனர் பிரபுதேவா.. ஆகியோருக்கு ரோல் இருக்குமா..? என்று சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …