படப்பிடிப்பு தளத்தில் விக்னேஷ் சிவன் செய்த வேலை..! – காதலில் விழுந்த நயன்தாரா..!

நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமான நாளிலிருந்து இவரைச் சுற்றி பல காதல் சர்ச்சைகளில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் அவை எதுவுமே தன்னுடைய சினிமா வாழ்க்கையை பாதித்து விடாத வண்ணம் நடிகை நயன்தாரா நேர்த்தியாக கையாண்டார். இது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு விஷயம்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தன்னுடைய தொழில் வாழ்க்கையை எந்த வகையிலும் பாதித்து விடக்கூடாது என்பதில் அதீத கவனத்துடன் செயல்பட்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

நடிகர் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து பின்னர் தன்னுடைய சினிமாக்களில் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை நயன்தாரா மிகவும் வித்தியாசமான கதை கொண்ட வெற்றிப் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

அதிலும் ஹீரோயின்களை மையமாக கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்றை உருவாக்கினார். அதுதான் ஹீரோயின் சென்றிக் படங்கள். அதன்பிறகு ஹீரோயின்களை மட்டும் வைத்து படங்களை தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களும் உருவானார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா ஆகியோர் இருவரும் சேர்ந்து நடித்த நானும் ரவுடிதான் என்ற படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து இருந்தார் நடிகை நயன்தாரா.

அந்த படத்தின் போது இவர்களுக்கு ஏற்பட்ட நட்பு காதலாக மலர தொடங்கியிருக்கிறது. நடிகை நயன்தாரா செல்லும் இடங்களில் எல்லாம் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கூடவே சென்று இருக்கிறார். அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

இதனால் விக்னேஷ் சிவன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. அதன் பிறகு இந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக உருமாறியது. இந்த பேட்டியின்போது இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் பிரபுதேவா போலத்தான் நீங்களுமா..? என்று கிண்டலாக கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியை கேட்டு சற்றும் கோபப்படாத இயக்குனர் விக்னேஷ் சிவன் யாரைப் போலவும் இந்த விக்னேஷ் சிவன் கிடையாது என்று பளிச்சென பதில் கூறினார். தொடர்ந்து வெளிநாடுகள் வெளியூர்களுக்கு நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் செல்லும் பொழுது அவருடன் துணைக்கு சென்று வந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

ஒரு கட்டத்தில் அவருடைய காதல் வலுவடைந்து தற்பொழுது திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரும் ஆகி இருக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …