நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலகி அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆடை சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட இருப்பதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய தேனிலவை கொண்டாட தாய்லாந்து ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் குடிகொண்டிருக்கும் நடிகை நயன்தாரா அங்கே தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ள படங்களில் நடித்து முடித்து விட்டு அதன் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் நடிகை நயன்தாரா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு திரைத்துறையில் தன்னுடைய பங்களிப்பை கொடுப்பார் நயன்தாரா என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பின்போது தாலியை கழட்டி வைத்துவிட்டு அல்லது மறைத்துக்கொண்டு நடிப்பது வழக்கம். பெரும்பாலும் நடிகைகள் தாலியை கழட்டி வைத்துவிட்டு நடிக்கிறார்கள். ஆனால், நடிகை நயன்தாராவுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்று கூறுகிறாராம்.
View this post on Instagram
எனவே, படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்து இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது நடிகை நயன்தாரா வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது