என்னுயிர் நீதானே… என கியூட் நயன்தாரா பொண்டாட்டியிடம் ஐ லவ் யூ சொல்லி உருகி வைத்த விக்னேஷ் சிவன்…!!

 தமிழ் சினிமா மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. இவரை அனைவரும் அன்போடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள்.

 இந்நிலையில் இவர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரை உலகு மட்டுமல்லாமல்  ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 அந்த வகையில் தற்போது இயக்குனரும் நயன்தாராவின் கணவர்மாகிய விக்னேஷ் சிவன் வெளியிட்ட வாழ்த்து பதிவானது வைரலாக பரவி வருகிறது. இந்த வாழ்த்து பதிவில் அவர்கள் இருவரது ரொமான்டிக்கான புகைப்படங்களையும் இணைத்து அவர் பதிவேற்றி இருக்கிறார்.

 இதை பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் பரவசம் அடைந்து விட்டார்கள் என கூறலாம். அட அப்படி என்ன அந்த பதிவில் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது நன்றாகவே கேட்கிறது. இந்த பதிவில் அவர் எப்படி கொடுத்திருக்கிறார் தெரியுமா?

 உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள் ஒவ்வொரு பிறந்தநாள் எனக்கு ஸ்பெஷலானது. மேலும் மறக்க முடியாதது. இந்த ஆண்டு கணவன் மனைவியாகிய நமக்கு அழகான இரண்டு குழந்தைகளுக்கு  பெற்றோர் ஆனதால் இந்த பிறந்தநாள் இன்னும் நமக்கு ஸ்பெஷல்.

 இன்னும் நான் உன்னை எப்போதும் தைரியமான பெண்ணாகவே பார்க்கிறேன். நீ எதை செய்தாலும் அதை தன்னம்பிக்கையோடு செய்வாய் என்ற நம்பிக்கை உன் மேல் உள்ளது. உனது நேர்மையால் நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டு வருகிறேன்.

 அதையெல்லாம் தாண்டி இப்போது உன்னை குழந்தைகளின் அம்மாவாக பார்க்கிறேன். இப்போது நீ தன் நிறைவு அடையப்பட்ட ஒரு மிகப்பெரிய தாயாகி விட்டாய்.

 எனினும் நீ இன்னும் அழகாகத்தான் இருக்கிறாய், குழந்தைகள் உன்னை முத்தமிடுவதால் நீ எப்போதும் மேக்கப் போடுவதில்லை. உன் முகத்தில் புன்னகை மற்றும் மகிழ்ச்சி உன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும்.

 என் உயிர்,உலகம் எல்லாமே நீ தான், லவ் யூ பொண்டாட்டி தங்கமே .. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அசத்தும் விதத்தில் விக்னேஷ் சிவன் எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதை பார்த்து அனைவரும் இருவரையும் பாராட்டிய வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் இவர்கள் நீண்ட காலம் ஒற்றுமையுடன் இதே போல வாழ வேண்டும் என்ற ஆசையையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …