சக்க போடு… போடும் காட்பாதர், மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா..!

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.நயன்தாரா திருமணத்திற்கு முன்பு சில படங்களில் நடித்து முடித்துள்ளார். அப்படி அவர் நடித்த ரீமிக்ஸ் திரைப்படமான காட்பாதர் தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடியாகும், இப்படம் வெளியான 3 நாளில் பட்ஜெட் தொகையை வசூல் செய்து விட்டது.2019-ல் மோகன்லால் அவர்கள் நடித்து மலையாளத்தில் வெளியான லூசிபர் என்னும் திரைப்படத்தின் ரீமேக் படம் தான் காட்பாதர்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான், பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை ஆர். பி. சவுத்ரியன் சூப்பர் ஹிட் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் படமாக மாறி உள்ளது.

இதனிடையே படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நயன்தாரா தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ‘காட்பாதரை’ மாபெரும் வெற்றி படமாக மாற்றிய திரைப்பட ஆர்வலர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், ‘காட்பாதர்’ எனக்கு சிறப்பு வாய்ந்த படம் இப்படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றியடைய வைத்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒவ்வொரு நொடியும் என்னை மேம்படுத்திக் கொண்டேன் என்றும், மூன்றாவது முறையாக என்னை நம்பி வாய்ப்பளித்த மோகன்ராஜ் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் பாலிவுட் பிரபலமான சல்மான் கான் அவர்களும் நடித்துள்ளார், அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ஏன்? அவரை பிடிக்கும் என்பது இப்படத்தைப் பார்த்தால் அனைவருக்கும் புரியும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தில் இப்படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிய ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை தனது நன்றியை தெரிவித்துள்ளார் நயன்தாரா!

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …