என்னது நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லையா? ராஜா…!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோல்டு திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அல்போன்ஸ் புத்திரன் நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த படமான நேரம் படத்தை இயக்கியவர். மேலும் இவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் பெரிய அளவு வெற்றியை தந்தது. இந்த படத்தில் இவர்தான் சாய் பல்லவியை அறிமுகம் செய்து வைத்தார்.

 மேலும் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படமானது தமிழக மக்கள் மத்தியிலும் பெரிய இடத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏழு ஆண்டுகள் எந்த ஒரு பட இயக்கத்திலும் ஈடுபடாமல் இருந்த அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

 தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ரிலீசாக இருக்க ரிலீஸ் ஆக இருந்த இந்த திரைப்படமானது மலையாளத்தில் மட்டும் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழ் வெர்ஷன் என்னும் ரிலீஸ் ஆகாதது ஏன் என தெரியவில்லை.

 இதற்குக் காரணம் இந்த படத்தின் சென்சாராக இருக்கலாமா என்ற விதத்தில் கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. எனவே இந்த தமிழ் படத்தின் வெர்ஷன் ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 2 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படலாம் என்ற செய்திகளும் வந்துள்ளது.

 குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த படத்தை பற்றி இதுவரை எந்த ஒரு ட்ரெய்லரோ, ப்ரொமோஷனோ இல்லாத நிலையில் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் களம் கால உள்ளது.

எனவே தமிழ் ரசிகர்கள் அனைவரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதற்கு இன்றே தயாராகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

இதனை அடுத்து அல்போன்ஸ் புத்திரனுக்கு இந்த படம் மீண்டும் ஒரு மாஸ் வெற்றியைத் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …