விதிகளை மீறி அம்மா ஆனாரா… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா…!

 பல ஆண்டுகளாக நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

 பிரம்மாண்டமான முறையில் நிகழ்ந்த இவரது திருமணத்திற்கு கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலர் வந்துதிருந்து ஆசிர்வாதம் செய்தார்கள்.

மேலும் திருமணமான நான்கு மாதத்திலேயே இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பெற்று வந்ததாக செய்திகள் வெளிவந்தது.இதனையடுத்து பல கடும் சர்ச்சைகள் வெடித்தது.

 இந்த செய்தியை விக்னேஷ் சிவன் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து வாடகைத் தாய் வழியாக குழந்தையை பெற்றிருக்கும் இவர்கள் விதிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொண்டார்களா? என்ற சர்ச்சைகள் பெரிதாக எழுந்தது.

 எனவே இதுகுறித்து தமிழக அரசு விசாரணையை மேற்கொள்ள மருத்துவம் மற்றும் ஊரக சேவைப் பணிகள்  இயக்குனரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

 இதனை அடுத்து களம் இறங்கிய இந்த குழு தற்போது  மிக முக்கியமான ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தற்போது வந்துள்ளது.

 அதுபோலவே இவர்கள் மேலும் வாடகைத்தாய் வழியாக குழந்தையை பெற்றுக்கொள்ள பிரபல குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில் 2021 டிசம்பர் மாதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இவர்கள் எந்தக் குழந்தையை பெற்றுக் கொள்ள எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் மீறவில்லை என விசாரணை குழுவிடம் நயன்தாரா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் விளக்கம் தெரிவித்து இருப்பதால் இரண்டு மூன்று நாட்களாக நடந்து வந்த சர்ச்சைக்கு நயன்தாரா தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் இவர்கள் இருவரும் சட்டப்படி நடந்துகொண்டுதான் எந்த பிள்ளையாராக மாறி இருக்கிறார்கள் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …