“20 வயசு தான்.. ஆனா.. முத்தின மூஞ்சியா இருக்கு..” – நயன்தாராவை துரத்திய பிரபல நடிகர்..! – யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது என்று கூறலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் அலைந்து திரிந்து இருக்கிறார் என்பதுதான்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை நயன்தாரா. குடும்ப பாங்கான பெண்ணாக காட்சி அளித்த நடிகை நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அதிலும் குறிப்பாக அத்திரி பத்திரி கத்திரிக்கா என்ற பாடலில் குட்டையான கவனித்துக்கொண்டு சட்டையை மடித்து கட்டிக்கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

இந்த படத்தில் நடிக்கும் முன்பு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த குடைக்குள் மழை என்ற திரைப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா சென்றுள்ளார். நயன்தாராவை பார்த்த பார்த்திபன்.. தனது உதவியாளரிடம் வயது 20 தான் என்றாலும் கூட.. மூஞ்சி முத்துன மாதிரி இருக்கிறது.. எனக்கு இந்த பொண்ணு வேண்டாம். இளமையான கதாநாயகி தான் வேண்டும் என்று கூறி நயன்தாராவை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

இதனால் மனம் நொந்த நடிகை நயன்தாரா, வேறு வழி இல்லாமல் எங்கே செல்வது என்று தெரியாமல் தனது சொந்த ஊரான கேரளா செல்ல திட்டமிட்டிருந்த அவரிடம் நடிகர் பார்த்திபனின் உதவியாளர்.. முன்னணி இயக்குனர் இயக்கவுள்ள புதிய படத்தின் ஆடிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அவரும் புதுமுகம் ஹீரோயினாக வேண்டும் என கேட்டிருக்கிறார். அங்கே சென்று பாருங்கள் என்று ஆலோசனை கொடுத்திருக்கிறார். அதன்படி ஐயா படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.

இந்த படத்தில் நடிப்பதற்காக தாவணி பாவாடை-யுடன் வர வேண்டும் என தகவல் சொல்லி இருக்கிறார்கள் அதேபோல அணிந்துகொண்டு சென்று இருக்கிறார் நடிகை நயன்தாரா. அதன் பிறகு ஐயா படத்தில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பை பெற்றார் நயன்தாரா.

அன்று இயக்குனர் பார்த்திபன் உதவியாளர் இந்த விஷயத்தை சொல்லாமல் விட்டிருந்தால் நடிகை நயன்தாரா திரும்பி சென்று இருக்க வாய்ப்புண்டு. அதன்பிறகு அவருடைய வாழ்க்கை வேறு பக்கம் திரும்பி இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால், தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …