லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா தற்போது நடித்த கூடிய கனெக்ட் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகக்கூடிய நிலையில் உள்ளது. இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கு இருக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கக்கூடிய நயன்தாரா இவருக்கு ஜோடியாக பாலிவூட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்தியராஜ் வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த படத்தை இவர்களது சொந்த நிறுவனமான ரவுடி பிக்ச்சர் சார்பாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் நடிக்கக்கூடிய பட விழாக்களில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன என்ற கருத்தை செய்தியாளர்கள் கேட்டிருந்தார்கள்.
அது அந்த நடிகர்கள் நடித்த இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் ப்ரோமோஷன் நிகழ்வுகளாக இருந்தாலும் அவர் தவிர்த்து வருவது இயல்பாகிவிட்டது. இதனை அடுத்து கனெக்ட் பணத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தான் அந்த கேள்வியை எழுப்பி இருந்தார்கள்.
அதற்கான காரணத்தை தற்போது ஓப்பனாக கூறி இருக்கக்கூடிய நயன்தாராவின் கருத்தில் உண்மை உள்ளது என்று சிலர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் என்னவெனில் ஆரம்பகட்டத்தில் நயன்தாரா நடிக்கக்கூடிய படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்கள் இல்லாமல் தான் அமைந்தது.
அப்போது ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். எந்த ஒரு நிகழ்வு எனினும் அது ஹீரோக்களுக்கு மட்டுமே உரிய அந்தஸ்தை கொடுத்து கதாநாயகிகளை ஓரம் கட்டியது அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்வுகளில் ஹீரோவுக்கு அளிக்கப்படக்கூடிய முக்கியத்துவத்தை போல் ஹீரோயினிகளுக்கு முக்கியத்துவத்தை தர மாட்டார்கள்.
பொம்மை போலத்தான் அவர்களை நிக்க விட்டு காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். எனவே தான் எந்த ஒரு பட விழாக்களுக்கும் தான் செல்வதில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் சினிமாவில் பெண்களை சமமாக பார்க்கப்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.
தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கின்ற படங்களில் அதிக அளவு நடித்து வருகிறேன் இதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று தனது மகிழ்ச்சியை அந்த பேட்டியில் நயன்தாரா வெளிப்படுத்தி இருக்கிறார்.