தொங்க தொங்க தாலியை காட்டி சுற்றிய நயன்தாரா-வா இது..? – தீயாய் பரவும் புகைப்படங்கள்…!

திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா தனக்கு திருமணம் ஆனவுடன் மஞ்சள் தாலி கயிற்றுடன் அப்படியே வலம் வந்தார்.

இது பார்ப்பவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை மட்டுமல்ல நல்ல புத்தியை புகட்டுவது போல இருந்தது. பெண்ணுக்கு அழகே இந்த மஞ்ச தாலி தான் அதை எந்தவித கௌரவம் பார்க்காமல் அப்படியே தொங்க தொங்க வெளியே போட்டு இவர் வலம் வந்ததால் நிறைய பெண்கள் தங்கத் தாலியை விட்டு மஞ்சள் தாலிக்கும் மாறினார்கள்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விஜே மகாலட்சுமியை கூறலாம். இவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ரவீந்திரன் கட்டிய தாலியை நயன்தாரா செய்தது போலவே தொங்க தொங்க மஞ்சள் கயிற்றில் அணிந்து வலம் வந்தார்.

இந்நிலையில் நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். சிவப்பு நிற உடையில் நயன்தாராவும் பட்டு வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன் ஜொலித்த புகைப்படங்கள் அனைத்தும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார்கள். அங்கும் தாலியை மஞ்சள் கயிறுடன் தான் இவர் போட்டு இருந்தார்.

இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி இவர்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்ததை அடுத்து சில சர்ச்சைகள் ஏற்பட்டு அது விரைவில் முடிவுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தீபாவளிக்குப் பிறகு நயன்தாரா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதில் மஞ்சள் கயிற்றில் இருந்த தாலியை நயன்தாரா பிரித்து தங்கச் செயின்லில் அழகாக போட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தையும் அளப்பரியும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் விஜே வான மகாலட்சுமியும் இது போன்ற செயலில் ஈடுபடலாம் என்று ரசிகர்கள் முன்பே கணித்து விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …