தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பான் இண்டியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது பிரபல இறைச்சி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார் நடிப்பு மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில்களை செய்து வரும் நடிகை நயன்தாரா மறைமுகமாக பல்வேறு தொழில்களில் முதலீட்டையும் செய்து வைத்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் என்றால் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு உள்ளிட்டவற்றில் போடுவதுதான் நடைமுறை. ஆனால், நடிகை நயன்தாரா காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டும் தொழிலில் முதலீடு செய்கிறார்கள்.
பல முன்னணி நிறுவனங்களின் பங்குதாரராகவும் விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் நயன்தாரா அதன்மூலம் இளம் இயக்குனர்களும் நடிகர் நடிகைகளுக்கும் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அடிக்கடி கணவருடன் வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.