யார் அந்த வாடகைத்தாய்? வெளிவந்த குட்டு … அதிர்ச்சியில் நயன்தாரா…!

திருமணம் ஆகி வெறும் நான்கு மாதங்களே முடிந்த நிலையில் திடீரென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பால்  கடுமையான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகிறார்கள்.

 இதற்குக் காரணம் திடீரென்று சப்ரைஸ் கொடுப்பதாக எண்ணி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் இருவரும் அம்மா, அப்பா ஆகி விட்டோம் என்று அறிவித்த அறிவிப்பால் இவர்கள் சட்டத்தை மீறி செயல் பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

 இந்நிலையில் சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பல கருத்துக்களை கூறி வரக்கூடிய நிலையில் தமிழக அரசு சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்ய உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 திருமணத்திற்கு முன்பே இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவினை எடுத்து அதற்கான சம்மதத்தை தன் பெற்றோரிடம் பெற்றபின் தான் விக்னேஷ் சிவனை நயன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

 சட்டப்படி ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற முடியும் என்ற சட்டம் இருக்கும் போது இவர்கள் எப்படி இப்படி குழந்தையை பெற்றுக் கொண்டார்கள் என்ற சர்ச்சை மிகப் பெரிதாக வெடித்தது.

 இதனை அடுத்து தற்போது இவருக்கு வாடகை தாயாக இருந்தது கேரளாவில் இருக்கக்கூடிய நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் என்ற குட்டு வெளிப்படுகிறது.

 தற்போது இந்த 2 இரட்டை குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறந்த இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  மேலும் அங்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

எனவே எப்படியும் சட்ட ரீதியான இந்த சிக்கலை இந்த தம்பதிகள் சந்தித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது இருக்கிறார்கள்.

 மேலும் இந்த செய்தி அதிதீவிரமாக பரவியதால் சந்தோஷத்தை தந்ததை விட இவருக்கு சங்கடங்களை தந்திருப்பது தான் அதிகம். இதனால் இருவரும் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

எனவே வரும் நாட்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் எப்படி இந்த பிரச்சனையை சட்டரீதியாக சந்தித்து அதை சரி செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …