விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர் தற்போது துபாயில் மையம் கொண்டிருக்கின்றனர்.
நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையொட்டி அவருக்கு தெரியாமலேயே பல விஷயங்களை அவருடைய பிறந்தநாளுக்காக செய்து இருக்கிறார் நடிகை நயன்தாரா.
இதில் இரு தரப்பு நண்பர்களும் கலந்துகொண்டு நடிகர் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக துபாயில் பிறந்தநாளை கொண்டாடலாம் என்று விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கு வரவிருப்பதை விக்னேஷ் சிவனுக்கு கடைசி வரை வரவே சொல்லவே இல்லையாம்.
கடைசி நேரத்தில்தான் விக்னேஷ் சிவனுக்கு அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கே இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை தன்னுடைய வாழ்க்கையின் சிறந்த பிறந்த நாள் எனவும் இப்படியான பிறந்தநாளை கொண்டாடியது இல்லை இதனை நடத்திக் காட்டிய என்னுடைய நயனுக்கு நன்றி என்று தன்னுடைய பதிவை செய்திருந்தார் நடிகை நயன்தாரா.
இந்நிலையில், துபாயில் இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.