அது மட்டும் வேண்டாம்.. நயன்தாரா போட்ட ஆர்டர்..! – அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்…!

நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார் இந்நிலையில் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிர்ச்சி அடைந்தாலும் நயன்தாராவின் நிலையை கருத்தில் கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் கமிட்டாகியுள்ளார் நடிகை நயன்தாரா. அந்த படங்களில் நடித்து முடித்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து யோசிக்கலாம் என்று கூறியுள்ளாராம்.

எனவே நயன்தாராவின் இந்த நிலைமையை புரிந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் சரி என்று கூறியுள்ளாராம். கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் பாலிவுட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் முக்கியமான ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஷாருக்கானுக்கு ஹிட் படம் கிடைத்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.

இந்த படம் தனக்கு ஒரு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார். படம் எப்படி இருக்கப் போகிறது என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் நயன்தாரா தற்போது குழந்தை வேண்டாம் என்று விக்னேஷ்சிவனிடம் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் என்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்று பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …