முன்னாள் காதலனுடன் சொட்ட சொட்ட நனைந்த உடையில் நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா வில்லு பட படப்பிடிப்பு தளத்தில் தனது முன்னாள் காதலன் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. அவரை தீவிரமாக காதலித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு பிரபுதேவாவை உருக உருக காதலித்து வந்தார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவை காதலிக்கும் பொழுது அவர் நயன்தாராவுக்கு போட்ட கண்டிஷன்கள் விண்ணை முட்டியது என்று தான் கூற வேண்டும்.

நடிகை நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கூடாது. அந்த ஹீரோவுடன் நடிக்க கூடாது.. இந்த ஹீரோவுடன் நடிக்க கூடாது.. என கடுமையான கண்டிஷன்களை போட்டு இருக்கிறார் நடிகர் பிரபுதேவா.

ஒரு கட்டத்தில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ ராமராஜ்யம் என்ற திரைப்படத்தில் சீதாவாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் பொழுது இது தான் என்னுடைய கடைசி திரைப்படம் இனிமேல் நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று இந்த படப்பிடிப்பு முடியும் நாளில் கண்ணீர் மல்க நடிகை நயன்தாரா படக்குழுவினருடன் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தை அதிரவைத்தது.

சினிமாவில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நடிகை நயன்தாரா திடீரென சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறார் என்று ஏமாந்து தான் போனார்கள் ரசிகர்கள். ஆனால் நடிகர் பிரபுதேவாவுடனான காதல்… திருமணம் வரை இவரை கொண்டு செல்லவில்லை.

பிரபுதேவாவின் குடும்பத்தினர் விட்ட சாபமோ தெரியவில்லை. இவர்களுடைய காதல் பிரிந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் சினிமாவில் மின்னல் வேகத்தில் நடிக்க தொடங்கிய நடிகை நயன்தாரா மீண்டும் தன்னுடைய இழந்த பட வாய்ப்புகளை கிடுகிடுவென பெற்றார்.

உச்சகட்டமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றா.ர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த பொழுது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அவளையே தற்போது திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில், முன்னாள் காதலன் பிரபுதேவா உடன் படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …