நயன்தாரா கன்னத்தில் பளார் விட்ட இயக்குனர்..! – பலரும் அறிந்திடாத தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படக்கூடிய நடிகை நயன்தாரா 2015ஆம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்தார்.இந்தப்படத்தில் இவர் நடித்து வந்த வேளையில் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வந்து குவிந்தது.

எனக்கு பல நாள் கனவான கிராமப்புற கதைகளில் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்துக் கொண்டு இருந்த நயன்தாரா இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திருநாள் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டார்.

இதனை அடுத்து அவர் நானும் ரவுடிதான் மற்றும் திருநாள் இரண்டு படங்களில் மாறி மாறி ஷூட்டிங்குக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு மிகவும் அசதியாக திருநாள் படத்தின் முதல் நாள் சூட்டிங்கிற்கு சென்றிருந்த வேளையில் இயக்குனர் ராம்நாத் இடம் இன்று இந்த சூட்டிங் சற்று விரைவாக முடித்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார் இயக்குனர் ராம்நாத் .

ஆனால், நடிகை நயன்தாரா சரி என்று கூறிவிட்டு ஷூட்டிங்கை விரைவாக முடிக்காமல் கூடுதலாக இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொண்டார் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் சூட்டிங்கை நடத்தி விட்டு நயன்தாராவை அனுப்பிவிட்டாராம்.

பின்னர் திடீரென்று நயன்தாராவுக்கு தாயாக நடித்த நடிகை ராதாவிடம் நயன்தாராவை கன்னத்தில் அறையும் காட்சியை செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்.

ஆனால், அன்றைய படப்பிடிப்பு திட்டப்படி நயனிடம் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டில் அறை வாங்கும் காட்சி இல்லை என்றாலும் மிகப் பெரிய மனதோடு அந்த காட்சிக்கு அவர் சம்மதத்தைத் தெரிவித்து நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. மேலும் அவர் நினைத்திருந்தால் அந்த காட்சியை நீக்கியிருக்கலாம்.

மிகவும் உச்சத்தில் இருக்கக்கூடிய சமயத்தில் இதுபோன்ற ஸ்கிரிப்ட்டை அவர் ஏற்றுக்கொண்டு முழுமனதுடன் பொறுமையாக நடித்துக் கொடுத்ததினால் தான் இன்று அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்பதை தற்போதுள்ள நடிகைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …